india shines?





இந்த சிறார்களின் துயரங்களை பார்க்கும் போது கருணாவும் கனிமொழியும் ராஜாவும் ஸ்பெக்ட்ரமும் சுவிஸ் வங்கியும் தான் நினைவுக்கு வருகிறது..

asin,mahinda rajapaksa,salmankhan,



அசின், கொலைக்காரன் ராஜபக்சே மற்றும் மான் வேட்டைக்காரன் சல்மானுடன் உல்லாசமாக இருந்த போது...

bala cartoon,DMK tholvi



நீங்க கொடுத்த இலவச டிவி மூலமாதான் தான் 1லட்சத்து 76 ஆயிரம் கோடியை நீங்க ஆட்டையப்போட்டதை தெரிஞ்சுக்கிட்டு உங்களுக்கு வேட்டு வச்சோம்..

india shining..









இந்த சிறார்களின் துயரங்களை பார்க்கும் போது கருணாவும் கனிமொழியும் ராஜாவும் ஸ்பெக்ட்ரமும் சுவிஸ் வங்கியும் தான் நினைவுக்கு வருகிறது..

Banglaore Tamils Protest against Sri Lankan State Terrorism









கருப்பு ஜீலை 1983















1983 ஆம் ஆண்டு யூலை மாத இறுதியில் சிங்கள காவல் துறை காடையர்களுடன் கைகோர்த்து இணைந்து சிங்கள காடையர்கள் தமிழர்களையும் தமிழர் உடமைகளையும் சூறையாடிய துயர நிகழ்வுகள்..

கருப்பு யூலை 1983





















1983 ஆம் ஆண்டு யூலை மாத இறுதியில் சிங்கள காவல் துறை காடையர்களுடன் கைகோர்த்து இணைந்து சிங்கள காடையர்கள் தமிழர்களையும் தமிழர் உடமைகளையும் சூறையாடிய துயர நிகழ்வுகள்..

black july 1983





















1983 ஆம் ஆண்டு யூலை மாத இறுதியில் சிங்கள காவல் துறை காடையர்களுடன் கைகோர்த்து இணைந்து சிங்கள காடையர்கள் தமிழர்களையும் தமிழர் உடமைகளையும் சூறையாடிய துயர நிகழ்வுகள்..

thenmerku paruvakatru seenu ramasamy


தமிழ்நாட்டு உறவுகள்
சிறந்த திரைப்படத்திற்கு கிடைத்த இந்திய தேசிய விருதை தேசத்தாய் பார்வதியம்மாவிற்கு சமர்பித்தார் இயக்குநர் சீனுராமசாமி.

கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த தமிழ்ப்படமாக தென்மேற்கு பருவக் காற்று திரைப்படம் தேசிய விருதிற்கு தெரிவாகியுள்ளது.இந்திய தேசிய விருது கிடைத்ததையடுத்து கருத்துத் தெரிவித்த அதன் இயக்குநர் சீனுராமசாமி தமிழர்களின் வாழ்வுக்கு கிடைத்த விருதெனக் குறிப்பிட்டார்.

அத்துடன் இவ் உயரிய விருதை என் அம்மாவிற்கும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பார்வதி அம்மாளுக்கும் சமர்பணம் என தெரிவித்துள்ளார்.

இந்தியளவில் தயாராகி வெளிவரும் திரைப்படங்களில் சிறந்தவற்றை தெரிவு செய்து அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கௌரவிக்கப்படுகின்றன. இந்திய அரசின் மத்தரிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திரைப்பட விழாக்கள் இயக்குநகரம் சார்பில் இந்த விருதுகள் ஒவ்வோராண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு கடந்த ஆண்டு தாயராகி வெளிவந்த படங்களின் அடிப்படையில் விருதுகளிற்கு தெரிவானவர்களது விபரம் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மொழியில் வெளிவந்த படங்களில் சிறந்த படமாக இயக்குநர் சீனுராமசாமி இயக்கிய தென் மேற்கு பருவக்காற்று திரைப்படம் தெரிவாகியுள்ளது.

நிலம் கைவிட்ட மனிதர்களின் வாழ்க்கையினை மையமாக கொண்டு தமிழர்களின் வாழ்க்கையினை அப்படியே பதிவு செய்தமைக்காக இந்த விருது கிடைத்துள்ளதாக தெரிவித்த இயக்குநர் சீனுராமசாமி இந்த விருதினை எனது அம்மாவிற்கும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பார்வதியம்மாளுக்கும் சமர்ப்பிக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த படத்தை உருவாக்கியதற்காக இந்திய அளவில் அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதையும் விட உயர்வான எண்ணத்தை கொண்டுள்ள சீனுராமசாமியை உலகத்தமிழர்கள் வாழ்த்தி வணங்க வேண்டும்.

விருதுகள் பெறவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருப்பது இயல்பு. அதுதான் அவர்களது சிறந்த படைப்பிற்கு வழங்கும் அதியுச்ச களரவமாக இருக்க முடியும்.

அந்தவகையில் இந்தியளவில் கிடைக்கப்பெற்ற தேசிய விருதை அதுவும் இந்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட விருதை உலகத்தமிழர்களால் தேசத்தாய் என போற்றப்படும் பார்வதியம்மாளிற்கு சமர்ப்பணம் செய்து உண்மையான தமிழனாக உயர்ந்து நிற்கின்றார் இயக்குநர் சீனுராமச்சந்திரன் அவர்கள்.

விருதுகள் கிடைத்ததும் பலர் தமது திறமையின்பாற் தற்பெருமைகொண்டு அந்த மயக்கத்தில் மிதப்பதையே விரும்புவார்கள். ஆனால் விருதுகளைவிட உணர்வுதான் முதன்மையானது என சிலர்தான் வெளிப்படுத்தி வருகின்றனர்.

உலகளாவிய உயரிய விருதான ஒஸ்கார் விருதை பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உலகின் சிறந்த படைப்பாளிகள் சூழ்ந்து நின்ற அந்த மேடையில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று தனது தாய் மொழியாம் நம் தமிழ் மொழியில் தெரிவித்து தமிழ் மொழிமீதான பற்றுதலையும் பாசத்தையும் எவ்வித பாசாங்குத்தனமும் இல்லாது வெளிப்படுத்தியிருந்தார்.

அதே போன்று கடந்த ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டடிருந்த உயரிய விருதை முள்ளிவாய்க்காலில் எமது இனம் செத்துக் கொண்டிருக்கையில் இந்த விருது வேண்டாம் எனக் கூறி திருப்பியனுப்பி தமிழனின் தன்மானத்தை வெளிப்படுத்தியிருந்தார் இயக்குநர் இமையம் பாரதிராசா அவர்கள்.

பின்னாட்களின் கருணாநிதியின் சாணக்கியத்தனத்தில் தனது தன்மானத்தை மனதுக்குள் மோதவிட்டு இன்றுவரை செயலற்று இருப்பது துரதிஸ்ரமாகும். அதுசரி கருணாநிதியின் சாணக்கியத்தனம் எல்லாம் தமிழர்களிடத்தும் தமிழ்மொழியிடத்தும் தானே செல்லுபடியாகும். அதற்கான பலனைத்தானே இப்போது ஆர அமர இருந்து மீளமுடியதா மனவேதனையுடன் அனுபவித்து வருகின்றார்.

ஆறுதல் தேடி தமிழகம் வந்தபோது நயவஞ்சகத் தனத்தால் விமான நிலையத்தில் வைத்தே பல மணிநேரம் காத்திருக்க வைத்து எமது தேசத்தாய் பார்வதியம்மாளை தள்ளாத வயதிலும் திருப்பியனுப்பியிருந்தது தமிழினத்தை அழித்தொழித்த சோனியா கருணாநிதி கும்பல்.

இன்று சோனியா கருணாநிதி கும்பலால் வஞ்சிக்கப்பட்ட தேசத்தாய்க்கு இந்திய அரசு வழங்கிய விருதையே சம்ர்ப்பணம் செய்து உண்மைத் தமிழ்மகனாக உயர்ந்து நிற்கின்றார் இயக்குநர் சீனுராமசாமி அவர்கள்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் உலக மேடையில் தாய் மொழியில் முழங்கியதைப் போன்று இயக்குநர் சீனுராமசாமி அவர்கள் தேசியவிருதை பெறும்போது அந்த மேடையில் வைத்து தேசத்தாய் பார்வதியம்மாளிற்கு இவ்விருதை சமர்ப்பிக்கின்றேன் என கூற வேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள்.

தேசத்தாய் பார்வதியம்மாளிற்கு தனது விருதை சம்ர்பணமாக்கி உண்மைத் தமிழனாக உயர்ந்து நிற்கும் இயக்குநர் சீனுராமசாமியை உலகத் தமிழர்களாகிய நாமும் வாழ்த்துவோம்.

இதே போன்று ஈழத்தமிழ் எழுத்தாளரான வ.ஐ.செ.ஜெயபாலன் அவர்களிற்கும் சிறந்த வில்லன் நடிகருக்கான தேசியவிருது கிடைத்துள்ளது. ஆடுகளம் என்ற திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஈழத்தமிழர் வ.ஐ.செ.ஜெயபாலன் அவர்களிற்கு இந்த விருது சிறப்புப் பரிசாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

kanimozhi kaithu..



நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்...

Brigadier balraj 3rd anniversary,balraj anna 3 aandu veeravanakkam

may 18 thuyaram,em makkal thuyaram



எம் மக்கள் துயரங்கள்

manitham in tamilina padukolai



இலங்கை அரசு பறிமுதல் செய்த புத்தகங்களை விடுவிக்க வேண்டும்: மனிதம் தொண்டு நிறுவனம் ஜெயலலிதாவிடம் கோரிக்கை
19 05 2011
இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட தமது புத்தகங்களை விடுவிப்பதில் தலையிடுமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சென்னையில் உள்ள மனிதம் தொண்டு நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புத்தகங்கள் எனக்கூறி இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை விடுவிக்க வேண்டும் என அப்புத்தகங்களை சென்னையிலிருந்து அனுப்பிய மனிதம் இண்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்னையை இந்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. மனிதம் தொண்டு நிறுவன அமைப்பாளர் அக்னி சுப்பிரமணியம் தமது புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டமை குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனிதம் இண்டர்நேஷனல் மனித உரிமைகளுக்காக பன்னாட்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. எங்கள் நிறுவனம் இலங்கையில் கடந்த 2009ல் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய தமிழினப் படுகொலை மற்றும் என்ன செய்யலாம் இதற்காக' என்ற இரண்டு புத்தகங்களை வெளியிட்டது.

அயர்லாந்தில் உள்ள பன்னாட்டு தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் இலங்கை அரசு மீதான போர்க் குற்றம் குறித்த வழக்கில் இந்த புத்தகங்கள் சாட்சி ஆவணங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே இது குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் பார்வைக்கு அளிக்கும் முகமாகத்தான் இப்புத்தங்கள் கனடா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

45 பெட்டிகளில் 1, 500 புத்தகங்கள் கடந்த மே 9ம் தேதி சென்னையிலிருந்து கப்பல் மூலம் கனடாவின் டொரண்டோ நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவை கொழும்பு துறைமுகம் வழியாகக் கொண்டு செல்லப்படுவதை எப்படியோ தெரிந்து கொண்ட இலங்கை அரசு கப்பலிலிருந்து கண்டெய்னரை இறக்கி புத்தகங்களைப் பறிமுதல் செய்துள்ளது.

மேலும் அப்புத்தகங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவை என ஒரு பொய்யான தகவலையும் தெரிவித்துள்ளது. இது உண்மைக்குப் புறம்பானது.அப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள், படங்கள் அனைத்தும் ஏற்கெனவே பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரமானவை. மேலும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் நேரடிப் பதிவுகள்தான் அவை.

போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு மீது ஐ.நா புகார் கூறியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அதிபர் ராஜபக்ஷ மீதான பிடி இறுகி வருகிறது. இதனை திசை திருப்பவே பொய்யான தகவல்களை இலங்கை அரசு தெரிவிக்கிறது.

இனப்படுகொலை குறித்து உண்மைத் தகவல்கள் அடங்கிய புத்தகங்களைத்தான் அவர்கள் கைப்பற்றி உள்ளனர். கனடாவில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றுக்கு அனுப்பப்பட்ட புத்தகங்களை பறிமுதல் செய்ய இலங்கைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்னையை இந்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தொடர்ந்தும் வேண்டுகோள் விடுத்தார்

மே 18 தமிழின படுகொலைகளின் 2-ஆம் ஆண்டு நினைவஞ்லி









LinkWithin

Related Posts with Thumbnails