kannur kadambathur Thiruvallur sathunavu koodam



தமிழ்நாடு மிகவும் வளர்ச்சிப்பாதையில் செல்வதாக குடும்பத் தொல்லைக்காட்சிகளில் சொல்கிறார்களே...
அதற்கு என்ன அர்த்தம் என்று யாரவது சொல்லுங்களேன்..

Muthukumar 2nd anniversary


தாயகம் காக்க..தமிழ் மக்கள் துயர் துடைக்க..தன் உயிரை ஆயுதமாக்கிய மாவீரன் தோழன் போராளி தியாகி கரும்புலி முத்துக்குமார் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்(29-1-2011)

pongal vaalthukkal,pongal greeting cards

பொங்கல் வாழ்த்து அட்டையை காண இங்கு கிளிக் செய்யவும்..
பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப அனைத்து தமிழ் மக்கள் வாழ்விலும் செல்வம் செழித்து அனைத்து வளங்களும் பெறவேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்போம்

desathin sothu, calendar 2011

தமிழ்நாட்டில் அனைவரிடமும் இருக்கும் தேசத்தின் சொத்து..











தமிழத்தின் எழுச்சி மற்றும் துயர நாட்கள்..

mahinda rajapaksa escape to srilanka cartoon,thanks to Oxford Union



லண்டனிலிருந்து தப்பித்து ராஜபக்சே தப்பித்து ஓடினான்...

maaveerar naal 2010 tanjore

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டதில் நடைபெற்ற 2010 மாவீரர் தின வீரவணக்க நிகழ்வுகளின் ஒரு பகுதி



கார்த்திகை பூக்கள்
.
அழகான கார்த்திகை பூக்கள்
பறிக்கப்படுகின்றன.
பறிக்கபட்ட பூக்களுக்காக
......
இத்தனை வண்ண மொட்டுக்கள்
விளைந்துகிடக்கின்றன.
பறிக்கப்படுவதற்காய்

இந்த பிஞ்சு விதைகள்
புதைந்துகிடக்கின்றன
விருட்சத்திற்காய்

இன்னும் அமைதியாய்
இரவுகள் காத்திருக்கிடக்கின்றன
விடியலுக்காய்

உன் உணர்வுகள்
உதிரமாய் போகின்றன..
காயங்கள் ஆவனமாகின்றன

அந்த வதைகள்
வரலாறாகின்றன
மனிதசோகம் மலராகின்றன

வலிகளை மறக்க
பாதச்சுவடுகளை
உறவுகள் தேடுகின்றன

இரவில் கனவில்
பகலில் நிழலில்
பச்சையாய் தெரிவது

பசும்புல் இல்லையே
உரமாய்போன உன்
உறவுகள் அல்லவா

காலம் அவனைபோல் ஓடுகின்றன
நீயும் ஓடுகிறாய் உன்னை துரத்துவது
அழகான கார்த்திகை பூக்கள்

காலம் உனக்காக காத்திருக்காது
உன் காலத்திற்காய் காத்திரு
அது உனக்காக வட்டமிடும் அந்தநாள்......?

நேசவன் தவக்குமார்

best comedian of the century karunanidhi, mathi cartoon

all tamil comedians are in high alert,



கடைசியில் காமெடியர்களுக்கு ஆப்பு..

Broker TV, tapped and trapped, Bala cartoon






ஒரு ஸ்பெக்ட்ரம் ஊழல் வந்து இந்திய ஜனநாயகத்தின் உண்மை நிலையை உலகுக்கும் அதன் மக்களுக்கும் தெளிவாக உணர்த்திவிட்டது என்றால் அது மிகையல்ல.

Doctor Vijayakanth samuga sevai pattam Bala cartoon



விஜயக்காந்துக்கு சமுக சேவைக்காக டாக்டர் பட்டம் மதி அவர்களின் கருத்துப்படம்..

All tamils must write to united nation regarding to sri lanka masscare

எல்லோரும் எழுதுவோம்! சர்வதேச விசாரணை அமைய எழுதுவோம்!

முள்ளிவாய்க்கால், தமிழர் மனங்களை இன்றும் நிறைத்து நிற்கும் வடு. அந்த பேரவலத்திற்கு இன்னும் பரிகாரம் தேடுகின்றனர் ஈழத்தமிழ் மக்கள்.

தனது கடமையில் இருந்து தவறிய ஐ.நா சபையும் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் தொடர்ந்து எழுந்த அழுத்தம் காரணமான ஈற்றில் ஓராண்டின் பின்பு, இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு ஒன்றை கடந்த யூன் மாதம் நியமித்தார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சுகி டாருஸ்மன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூக்கா, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின்; பணிகள் நான்கு மாதங்கள் கழித்து கடந்த செப்ரெம்பர் 18 ஆம் நாளே தொடங்கியது.

இந்த நிபுணர் குழு, 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்குப் பயணம் செய்த ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் சிறீலங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச இருவரும் விடுத்த கூட்டு அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள்; நடைமுறைபடுத்தப்பட்டனவா என்பது தொடர்பாக ஆராயவுள்ளது.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது பன்னாட்டுச் சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா? என்பது தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயும்.
இந்தக் குழு உண்மை கண்டறியும் குழுவாக இருக்கமாட்டாது எனத் தெரிவித்துள்ள ஐ.நா. பேச்சாளர், செயலாளர் நாயகத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆலோசனை வழங்கும் உரிமை மட்டும் இதற்கு உண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குழு அமைக்கப்படுவதைத் தடுக்க சிறீலங்கா அரசு பகீரத முயற்சிகள் செய்து பலத்த எதிர்ப்புக்கள் தெரிவித்த போதும் அதனை மீறி ஐ.நா. அவையின் செயலாளர் நாயகம் இந்தக் குழுவை அமைத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

இது இராசதந்திர மட்டத்தில் சிறீலங்கா அரசுக்குக் கிடைத்த படுதோல்வி ஆகும். தமிழர் தரப்புக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவை எதிர்த்து சிறீலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த யூலை மாத முற்பகுதியில் ஐ.நா.வின் கொழும்பு தூதுவராலயத்துக்கு முன் பௌத்த தேரர்கள் புடை சூழ சாகும்வரை உண்ணாநோன்பு இருந்தார். அவரது ஆதரவாளர்கள் ஐ.நா.தூதுவராலயத்தை நாள்கணக்கில் முற்றுகை இட்டு முடக்கினார்கள். இதனால் தூதுவராலய ஊழியர்கள் பாதுகாப்புக் கருதி அங்கிருந்து வெளியேற நேர்ந்தது.

இந்தக் குழு அமைக்கப்படுவதற்கு 118 அணிசேரா நாடுகளைக் கொண்ட அணிசேரா அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. பின்னர் அந்த எதிர்ப்பு கைவிடப்பட்டது. இந்த அணிசேரா நாடுகளின் அமைப்பில் சிறீலங்கா இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிபுணர் குழுவை எதிர்த்து ரஷ்ய வெளியுறவு அமைச்சு அறிக்கை விட்டது. அதில் ஐ.நா.பாதுகாப்பு அவை மற்றும் பொதுச் சபை இரண்டையும் மீறி பான் கீ மூன் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. .

சிறீலங்கா அரசு நிபுணர் குழு உறுப்பினர்கள் நாட்டுக்குள் நுழைவதற்குத் தடைபோட்டுள்ளது. இந்த குழுவுடன் எந்தவொரு தொடர்பையும் பேணப்போவதில்லை என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது..

இந்நிலையில் கடந்த செப்டம்பரில் கூடிய இக்குழு தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக வெளியில் இருந்து கருத்துக்களை பெறவிரும்பி ஒரு அறிவுறுத்தலை கடந்த ஒக்டோபர் 14ஆம் நாள் வெளியிட்டது. அதில் சில அறிவுறுத்தலிகள் வெளியிடப்பட்டுள்ளன.

1) கருத்துக்களை, முறைப்பாடுகளை செய்ய விரும்பும் முறைப்பாட்டாளர்கள் எழுத்து மூலம் பத்துப் பக்கங்களுக்கு மேற்படாத முறைப்பாட்டை சமர்ப்பிக்கலாம் என்றும் ஒருவர் ஒரு முறைப்பாட்டை மட்டும் சமர்ப்பிக்கலாம் எனவும் குறிபிடப்பட்டுள்ளது. கருத்துக்களை, முறைப்பாடுகளை அனுப்பி வைப்போர் தமது தொடர்பு விபரங்களை தவறாது குறிப்பிடுமாறும் வேண்டப்பட்டுள்ளனர். முறைப்பாடு எந்த மொழியில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படாவிட்டாலும் ஆங்கில மொழியில் அனுப்புவதே சிறந்தது. ஆங்கிலம் தெரியாதோர் தமிழில் எழுதி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வசதியைப் பெற்று ஆங்கிலத்திலேயே அனுப்புதல் சிறந்தது.

யாரும், அவர் எந்த நாட்டையோ இனத்தையோ சார்ந்தவராக இருப்பினும் இங்கு தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம். சுயாதீனமான சர்வதேச நீதிவிசாரணையே இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த பேரவலத்திற்கு தீர்வாக அமையும் என்ற கருத்தை அனைவரும் வலியுறுத்துவதே இங்கு முக்கிய கருதுகோளாகும். சிறீலங்கா ஆட்சியாளர்களால் அமைக்கப்படும் எந்த விசாரணைக்குழுவும் அதற்கு பரிகாரமாக அமையாது என்பது பலதரப்பாலும் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதிலும் உலகறிந்த தலைவர்கள் பலர் இக்கருத்தையே தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதில் பின்வருவோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

Archbishop Desmond Tutu, chair of The Elders, David Cameron, British Prime Minister, Navaneetham Pillai, United Nations high Commissioner for human Rights, Kofi Annan, Former UN Secretary-General, Jimmy Carter, 39th President of the United States of America, Nelson Mandela, Former President of South Africa, Mary Robinson, Former Irish President and former UN high Commissioner for human Rights, Madame Louise Arbour, President and CEO, International Crisis Group, Fernando henrique Cardoso, Former President of Brazil, Kenneth Roth, Executive Director, human Rights Watch, Salil Shetty, Secretary General, Amnesty International, Martti Ahtisaari, Former President of Finland and international mediator, Lakhdar Brahimi, Former Algerian Foreign Minister and former UN envoy, Grafa Machel, Former Minister of Education and Culture in Mozambique.

இந்நிலையில் நாம் தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் எழுதுகின்ற அதேவேளை ஏனையவர்களையும் எழுத வைக்கவேண்டும். யாரெல்லாம் எழுதலாம்.

அ) நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாமே எழுதலாம்

ஆ) உறவுகள், நண்பர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் சார்பில் எழுதலாம்

இ) தமிழர் அமைப்புக்கள், ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் அமைப்புகள், புலம்பெயர்ந்த தமிழ் மாணவர் அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள், மத அமைப்புக்கள், மகளீர் அமைப்புக்கள், தொழில்சார் வல்லுனர்கள் எனத் தமிழர்கள் அனைவரும், அமைப்க்களாகவும், தனிநபர்களாகவும் எழுதலாம்.

ஈ) தமிழர் இல்லாதோர், அரச சார்பற்ற நாட்டு அல்லது பன்னாட்டு அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் புரியும் சகநண்பர்கள், சேர்ந்து கல்வி கற்கும் கச நண்பர்கள், கல்விமான்கள், தொழிற்சந்க வாதிகள் எனத் தமிழர் இல்லாதோர் அனவரையும் எழுத வைக்கலாம்.

ஒருவர் ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பலாம்.

அனுப்பவேண்டிய முகவரி - panelofexpertsregistry@un.org

இந்த மின்னஞ்சலை வேறு யாரும் பார்க்க முடியாது.

அனுப்பி வைப்பதற்கான காலக்கெடு: டிசெம்பர் 15, 2010

முறைப்பாட்டாளர்கள் விரும்பின் அந்தந்த நாட்டு தமிழ் அமைப்புகளுக்கு ஒரு பிரதியை அனுப்பலாம். கனடாவைத் தளமாகக் கொண்ட போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவத்திற்கு ஒரு படியை அனுப்பி (un@cwvhr.org) வைக்கலாம்.

சிறீலங்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் முன் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் உறவினர்களும் பொது அமைப்புக்களும் தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்வது அவசியம். இந்தக் குழுவின் அதிகாரங்கள் சிறீலங்காவில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பன்னாட்டு மனிதவுரிமை மற்றும் போர் பற்றிய மானிட சட்ட மீறல்கள் பற்றி ஐ.நா அவையின் செயலாளர் நாயகம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் என மட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும் அதன் பரிந்துரைகள் ஒரு முழு அளவிலான போர்க்க குற்ற விசாரணைக்கு வழிசமைக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

எனவே உங்கள் சமர்ப்பித்தல்களின் இறுதியில் நிபுணர் குழு கீழ்க்கண்டவற்றை ஐ.நா.அவைச் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்கலாம்.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் பன்னாட்டு மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களையும் விசாரிக்க ஒரு சுதந்திரமான குழுவை அமைத்தல்.

எனவே இந்த அரிய வாய்ப்பைத் தமிழ்மக்கள் நழுவ விடக்கூடாது. நாம் அனைவரும் எழுதுவதுடன் ஏனையவர்களையும் எழுத வைப்போம். சர்வதேச விசாரணை அமைய விரைந்து எழுதுவோம். உதவிகள் தேவைப்படின் 416-628-1408 என்ற தொலைபேசி இலக்கத்தில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவத்தை அழைக்கவும்.

கொலைக்காரன் ராஜபக்சே் செய்த படுகொலைகளின் சில லிங்குகளுக்கு இங்கு கிளிக் செய்யவும்


maverar nal veravanakam

சிங்கள,இந்திய மற்றும் உலக காடையர்களால் சிதைக்கப்பட்ட எம் மாவீரர் துயிலும் இல்லங்கள் அன்று..









நான் பெரிது..... நீ பெரிது....... என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்ளே எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது. மேதகு .வே. பிரபாகரன்

maaveerar naal 2010 thiruvarur



தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டதில் நடைபெற்ற 2010 மாவீரர் தின வீரவணக்க நிகழ்வுகளின் ஒரு பகுதி

தமிழர் இறையாண்மை மாநாடு

தமிழர்களின் இறையாண்மையை காத்த பல மாநாடுகள் எமது ஈழ தேசத்தில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் ஈழத்தமிழர்களால் நடாத்தப்பட்டது அவ்வேலைகளில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் குவிந்து விழாவினை சிறப்பிப்பார்கள்..அவ்வாறு நிகழ்ந்த மாநாட்டு நிகழ்வுகளில் சில..







தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..

Manifestation Paris

2G Spectrum scandal parattu vizha bala cartoon

free srilanka tour, free accommodation and transportation in srilanka, all are free*Conditions Apply

ஈழத் தமிழர் படுகொலைக்கு துணைநின்று பல கபட நாடகங்களை நடத்தி தமிழ்நாட்டு தமிழர்களை திசைதிருப்பி..
உலக அரங்கில் இனப்படுகொலைகளை மறைக்க ரத்த வெறியன் ராஜபக்சேவுக்கு உறுதுணையாக இருந்த கயவர்களில் சிலரை இந்த லிங்க்குகளில் நீங்கள் பார்க்கலாம்..


டி.ஆர்.பாலு,கனிமொழி,திருமா டூர்..

திருமா டூர் கார்ட்டூன்..

திமுக காங்கிரஸ் எம்பி டூர்..

நடிகை அசின் டூர்..

சாருக்கான் டூர்.

கிரிக்கெட் ஆட்டக்காரன் காம்பிர்,நெஹ்ரா டூர்..

கிருஷ்ணா டூர்..

ஹிட்லர் காலத்தில் இவர்கள் வாழ்ந்திருந்தால் அவனை(ஹிட்லர்) கொலைக்காரனாக அடையாளம் கண்டிருக்க முடியாது..
இவர்களிடம் பரிசில் கொடுத்தால் இவர்கள் அந்த கொலைக்காரனுக்கும் சர்டிபிகேட் கொடுத்திருப்பார்கள்..

"சுற்றுலா" மற்றும் "பரிசுகள்" என்றால் இவர்கள் ஹிட்லரின் கல்லரைக்கு கூட சென்று "ஆகா எங்கள் காலத்தில் நீங்கள் இருந்திருந்தால் உங்களை எல்லோரும் கொலைக்காரன் என்று தூற்றுவார்களா?" என்று சொல்லக்கூடியவர்கள்..

*only for genocide partners

DMK varalaru Mathi dinamani cartoon



திமுக வரலாற்றினை வெட்டவெளிச்சமாக்கி அனைத்து மக்களுக்கும் உணர்த்தும் மதி அவர்களின் தினமணி கருத்துப்படம்..

maaveerar naal 2010 tirupur periyar dravidar kazhagam











கடந்த வாரம் திருப்பூரில் நடைபெற்ற 2010 மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வின் ஒரு பகுதி..

tamilannai isaipriya, tamil annai isai priya

தமிழன்னை இசைபிரியா..






தம் மக்களைக் காக்க போராடுபவள் அன்னை என்றால்..
தமிழ் மக்களைக் காக்க போராடியவள் தமிழன்னை தானே..

எமக்கு எம் அன்னையையும் தெரியும்..
எம் தமிழன்னையையும் தெரியும்..

"People Killer" mahinda rajapaksa brutally killed tamil people in srilanka


balaji

தமிழ் மக்களை பல கொடுமைகளுக்கும் உள்ளாக்கி கொலைசெய்த கொடுங்ககோலன் கொலைக்காரன் ராஜபக்சே தற்போது லண்டனில் இருக்கும் நிலை விளக்கி வரையப்பட்டிருக்கும் கருத்துப்படங்களில் ஒன்று..

Now Killer rajapaksa Demo is Moved To Dorchester Hotel London Park Lane W1A 2HJ





கொடுங்கோலன் மஹிந்த தங்கி நிற்கும் விடுதி முகவரி மற்றும் நம்பர் இங்கே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய வண்ணம் இருக்கிறார்கள்.

தமிழர்களை அழித்து ஒழித்த கொலைகார இலங்கை கிட்லர் மகிந்தா அவரது படை பட்டாளங்களுடன் ஆடம்பர விடுதியில். தங்கி நின்று கும்மாளம் .முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் சாவல் விட்டு மக்களின் ஆர்ப்பாட்டத்தை ஜன்னல் வழியாக பார்வை இட்டு கொண்டுள்ளாராம் ./

கொட்டும் அடர் பனி மழைக்குள்ளும் கடும் குளிரில் நடுங்கிய படி மக்கள் அங்கும் ஆர்ப்பாட்ட போர்க்கொடியை நடத்திய வண்ணம் உள்ளனர் .

நீங்களும் இன்றே சென்று கலந்து கொள்ள கீழ் வரும் முகவரிக்கு விரைந்து செல்லுங்கள்.

தொலைபேசி இலக்கம். 00442076298888

DORCHESTER HOTEL

MAYFAIR ,PARK LANE

LONDON W1K 1QA.

போராட்டத்திற்காக பேரூந்துகள் உங்கள் நகரங்களில் இருந்து புறப்படவுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு :

North West Transport arrangement, All coaches Leave at 3pm:-

Harrow: Ashely cash& carry, Abi diamond, Rooks Heath School.

Sothall: Tamilini cash & carry, Lady Margaret halal meat, Goldman Estate.

Hayes: Tamilan cash & carry.

Wembley: In front of Alperton underground station.

Colindale: Thirupathai cost cutter, Royal Food & Wine.

Watford: St Albans Road.

More info: 075 7268 0443

மேலதிக பேரூந்துகள் விடப்பட இருப்பதால் உங்கள் அருகில் உள்ள தமிழ் அமைப்புகளோடும் தொடர்புகொள்ளுங்கள்.

talk by the President of Sri Lanka,Killer Mahinda Rajapaksa, has been cancelled

கொலைக்காரன் ராஜபக்சே ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்ற இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக ஆக்ஸ்போர்டு யூனியன் இணைய தளத்தில் செய்தி..

http://www.oxford-union.org/home

bihar election rahul gandhi formula Bala cartoon



தமிழ் நாட்டிலும் காங்கிரஸ் கைப்புள்ளைகளின் டவுசர் கழப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன்..
கூடவே `கை’யை விடாமல் தூக்கி பிடிப்பவர்களின் டவுசரும் சேர்த்து கழட்டப்பட வேண்டும்...

world aids day, mathi cartoon



mathi dinamani cartoon

ஆம், ஊழல் கிருமியிடமிருந்து தப்ப வழியே இல்லை...

pagutharivu stalin puttaparthi sai baba



பகுத்தறிவு..
தனக்கு ஒன்று.. மக்களுக்கு ஒன்று..

2G spectrum commonwealth scandal,mathi cartoon



கோடி கோடிகளாக மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் கேடிகளை பற்றி மதி அவர்கள் தினமணிக்காக வரைந்த கருத்துப்படம்..

LinkWithin

Related Posts with Thumbnails