deva neyapaavanar

மலேசியா நாட்டில் நம் தமிழ் அறிஞருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அஞ்சல் தலை வெளியீடு. அதுவும் தமிழ் மொழிலேயே வெளியிட்டுள்ளது அந்நாட்டு அரசு.

kidnap white van srilanka

iniya thirumana vaalthukkal,muthu rajam thirumana mahal,vaitheeswaran kovil

மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம்..

manmunai eelam freedom fighters

thenisai chellappa and annan

tamil in china

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில் குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் குடிநீர் இருப்பது தொடர்பாக குறிக்கபட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது தமிழின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது.
mil

karunanidhi talk about eelam 2009 and 2012, bala cartoon


ஆட்சியில் இருந்தா ஒரு பேச்சு.. இல்லனா ஒரு பேச்சு.. எவ்வளவு காலத்துக்கு தான் தமிழன் இந்த நாடகத்தை பார்த்து தொலைக்கணுமோ..

muthuvaduganathar, maruthu sagotharargal



வீரமும் திறமையும் 


சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதர் தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்தியும் , 

மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, போர் பயிற்சி பெற்றவர். பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர், ஆங்கிலம் அறிந்தவர். மதிநுட்பமிக்கவர். மன்னருக்கு சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார். வனப்பகுதிகள் நிறைந்து அரணாக நின்ற காளையார் கோவிலில் தான் கோட்டையும் இதற்கு ஒரே ஒரு கோட்டை வாயில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்த காளையார் கோவில் காட்டில் தான் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர். அந்த மாதிரி ஒரு வேட்டைக்குச் செல்லும் பொழுது மருது சகோதரர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பல மிருகங்களை வேட்டையாடிக் கொன்றனர். வேங்கை ஒன்று அரசர் மீது பாய்ந்தது , சின்ன மருதுகுறுக்கில் பாய்ந்து வேங்கையுடன் கட்டிப் புரண்டார். சின்ன மருதுவின் தாக்குதலால் வேங்கைப்புலி புதர் மறைவில் ஓடி மறைந்தது. அடிப்பட்ட புலி சும்மா இருக்காது என்பதை உணர்ந்த பெரிய மருது சமயம் பார்த்திருந்தார். திடீரென வேங்கையின் வாலைப் பிடித்திழுத்து தலைக்குமேல் சுழற்றி தரையில் ஓங்கி அடித்தார் பெரிய மருது. பிறகு அதன் வாயைப் பிளந்து கொன்றார். அந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நெகிழ்ந்து போன அரசர் சிறுவயல் என்ற கிராமத்தை பெரிய மருதுவிற்கும் புலியடி தம்மம் என்ற கிராமத்தை சின்ன மருதுவிற்கும் அளித்து பெருமை செய்தார். இவர்கள் அந்தந்த பகுதியில் சமீன்தார்களாக 1769 ஆண்டில் இருந்தனர். அந்தச் சமயத்தில் தான் சருகணி மாதா கோவிலுக்கு பெரிய மருது சமீன்தார் என்ற முறையில் தேர் ஒன்றை வழங்கியதாகச் செய்தி உள்ளது. இந்த நிலையில் தான் பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் தளபதி சுவப்பிரமணியத் தேவர் ஆகியோர்கள் வயது முதிர்ந்தனர். அவர்களிடம் பயிற்சி பெற்ற பெரிய மருதுவை தளபதியாகவும் ,மதிநுடட்பம் நிறைந்த சின்னமருதுவை அமைச்சராகவும் அரசர் முத்து வடுகநாதர் நியமித்தார். அரசி வேலு நாச்சியருக்கு சிறந்த முறையில் போர் பயிற்சியைத் தந்தவர் சின்ன மருதாவார்.

முத்து வடுகநாதரின் இறப்பும் அரசி வேலு நாச்சியாரின் பரிதவிப்பும்

சேது நாட்டரசர் விசயரகுநாத சேதுபதி 1762ல் காலமானார். அவரது சகோதரியுடன் 2 வயது மகன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டான். முத்துவை நாட்சியார் தளபதி வெள்ளையன் சேர்வை, அமைச்சர் தாமோதரன் பிள்ளை ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் சேது நாட்டின் ஆட்சி நடந்து வந்தது.

இதற்கிடையில் தளபதி காலமானார். தாமோதரன் பிள்ளை, தஞ்சை மன்னன் 1770ம் ஆண்டு சேது நாட்டுடன் போர் தொடுத்ததில் போர்காலத்தில் கொல்லப்பட்டார். சேது நாடு தஞ்சை மன்னன் வசமானது. தஞ்சை மன்னன் இவ்வாறு போர்தொடுத்து சேது நாட்டை தனதாட்சியின் கீழ் கொண்டு வந்ததை வெறுத்து நேரம் பார்த்திருந்தான். ஓராண்டு கழித்து ஆங்கிலேய தளபதி ஜோசப் சுமித் என்பவன் தலைமையில் தனது படையுடன் தஞ்சை மீது போர் தொடுத்தது. ஈடுகொடுக்கமுடியாத தஞ்சை மன்னன் ஆர்காட்டு நவாப்பிற்கு கப்பம் கட்டவும் பிடிப்பட்ட சேது நாட்டுப் பகுதிகைளத் திருப்பித் தரவும் ஒத்துக் கொண்டான். அதற்கு அடுத்த ஆண்டில் ஜோசப் சுமித் நவாப்பின் படை, புதுக் கோட்டைத் தொண்டைமான் படை உதவிஞடன் இராமநாதபுரத்தை முற்றுகையிட்டு வெற்றி கொண்டான். அரச குடும்ப வாரிசுகளைச் சிரைப்படுத்தி திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு சென்றான். அதன் பிறகு மீதமிருந்த சிவகங்கைச் சீமையைக் கைப்பற்ற நவாப்பு விரும்பினான். இதை சூழ்ச்சி முறையில் செய்து முடிக்க திட்டமிட்டான். ஏனெனில் ஆரக்காட்டு நவாபுடன் நட்புடன் அரசர் முத்துவடுகநாதர் இருந்து வந்தார்.

வஞ்சகத் திட்டம் ஒன்றை நாவபு தீட்டினான். இதையறியாத நிலையில் அரசர் முத்துவடுகநாதர் தனது இளைய ராணியுடன் காளையார் கோவில் காட்டிற்கு வெட்டையாடச் செல்கிறார் . ராணிவேலுநாட்சியார் கர்ப்பிணியாக இருந்ததால் கொல்லங்குடியில் தங்குகிறார். அன்றைய தினத்தில் நவாப்பின் படை கர்நாடக பட்டாளியனுடன் மங்கலம் நோக்கி வருவதாக ஒற்றன் மூலம் செய்தியறிந்த பெரிய மருது மங்கலம் சென்று அப்படைகளுடன் போரை எதிர் கொள்கிறார். இதனால் வெற்றி கிட்டாது என்பதை அறிந்து கொண்ட நவாப்பு மற்றொரு பிரிவு படையை கயவன் ஒருவன் உதவியுடன் குறுக்கு வழியில் காளையார் கோவில் கோட்டையை முற்றுகையிடுகிறான். நடு இரவில் இந்த படையெடுப்பை கோட்டை வீர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். உறக்கத்திலிருந்த அரசர் முத்துவடுகநாதர் எழுந்து சீறிப் பாய்ந்து போரிடுகிறார். வஞ்சகத்தால் ஏற்பட்ட போரில் அவரும் அவரது இளைய ராணியும் கொள்ளப்படுகின்றனர். உயிர் சேதம் அதிகம். சின்னமருதுவை இச்செய்தி திகைக்க வைக்கிறது. உடனே கொல்லன் குடியில் தங்கியிருந்த வேலுநாட்சியாரைக்காப்பற்ற துரித நடவடிக்கை மேற்கொண்டார் மங்கலத்தில் போர் செய்துக் கொண்டிருந்த பெரிய மருதுவும் , வேலு நாச்சியாரைக் காப்பாற்றவும் சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றவும் ஆலோசனை செய்கின்றனர். முதலில் அரசியைக் காப்பற்றவேண்டும். பிறகு ஆங்காங்கே இரகசியமாக படைதிரட்டி நாட்டைப் பிடிப்பது என்று முடிவு செய்கின்றனர். அதற்கு ஒரே வழி திண்டுக்கல் விருப்பாட்சியில் உள்ள நண்பர் ஹைதர்அலியுடன் பாதுகாப்பைக் கோருவதென்று விருப்பாச்சிக்கு இரவோடு இரவாக காட்டு வழியில் சென்று ஹைதர்அலியைச் சந்தித்து நடந்தவற்றை எடுத்துச் சொல்கின்றனர். பதட்டமும் கோபமும் கொண்ட ஹைதர்அலி வேலுநாச்சியாரை தனது சகோதரியாக்கி பாசத்துடன் பாதுகாப்பு வழங்கினார். பெரிய மருதுவும் சின்ன மருதுவும் சிறிது இளைப்பாருதலுக்கு பின்பு இரகசியமாக படைத்திரட்டும் பணிக்கு சிவகங்கை கிராமங்களை நோக்கி புறப்பட்டனர். 1772 முதல் 1780 வரை மறைவு வாழ்க்க நடத்தும் நிலை ஏற்பட்டது. அதற்காக அரசிவேலு நாச்சியார் பட்ட மனவேதனைகள் பல. விருப்பாட்சியில் தங்கி இருந்த பொழுது தான் ஒரு பெண் மகவை அரசி பெற்றெடுத்தார். வெள்ளட்சி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசிக்கு ஹைதர்அலி செய்து கொடுத்தார்.

இந்த காலக் கட்டத்தில் மருது சகோதரர்களின் திட்டம் 3

விருப்பாட்சியில் ஹைதர்அலியின் பாது காப்பில் அரசி வேலுநாச்சியாரை வைத்த மருது சகோதரர்கள் ஆரக்காடு நாவப்பிற்கும், கும்பினியார்களுக்கும் எதிராக தீவிரவாதப் படைகளைத் திரட்டும் பொருட்டு செயல்திட்டம் ஒன்றை ஹைதர்அலியடன் கலந்தாலோசித்து முடிவு செய்தனர். அத்திட்டப்படி தெற்கே உள்ள பாளையக்காரர்களை வீரபாண்டிய கட்ட பொம்மன் தலைமையில் தூத்துக்குடி வரை ஒன்றுபடுத்தி நவாப்பிற்கும் கும்பினியார்களுக்கும் எதிராகச் செய்லபடுத்துவது என்ற முடிவாகியது. சிவகங்கை சீமை மக்களை அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆங்காங்கே கும்பினியர்களுக்கு எதிராக தீவிரவாதத்தை அளிப்பது என்றும் முடிவாயிற்று. இதற்கு தனது பங்கிற்கு படை வீரர்களையும் குதிரைகளையும் வேண்டும் பொழுது தருவதாக ஹைதர்அலி உறுதியளித்தார். இது அவரது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியது.
இதனை செயல் திட்டமாக்க ஹைதர்அலி விருந்துஒன்றுக்குஏற்பாடு செய்து அதில் ஊமத்துரையை கலந்து கொள்ள வைத்தான். மருதுவைப் போன்ற மதிநுட்பமும், வீரமும் கொண்ட ஊமைத்துரையும் சின்னமருதுவும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நண்பர்களாயினர். விருந்திற்கு பிறகு மருது சகோதரர்கள் சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில் செயல்பட்டு வந்த கும்பினியர் எதிர்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க உடன் புறப்பட்டனர். மருது சகோதரர்கள் தாம் சாதரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் கீழ் மட்ட மக்களின் மனதைக் கவர்ந்து அவர்களைத் தங்கள் செயல்திட்டத்திற்கு ஆட்கொள்வதில் எளிதில் வெற்றி கண்டனர். காட்டுப் பகுதியில் ஆயுதம் தயாரிக்கும் பட்டறைகளை நிறுவினர். சிறந்த வீர்களைத் தேர்ந்தெடுத்துப் போர் பயிற்சி அளித்தனர். உளவுப் படை வீர்களைத் தயார் செய்து நவாப், தொண்டைமான், கும்பினியர் ஆகியோர்களின் போர் நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்பட்டனர். மருதுசகோதரர்களோ மக்களோடு மக்களாக ஒன்றாகக் கலந்து செயல்பட்டதால் மக்களும் உற்சாகத்துடன் நாட்டை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மக்களின் இந்த நிலை ஏனைய பாளையங்களிலோ, அரசாட்சிகளிலோ இல்லை எனலாம்

prabhakaran tamilar yeluchi in vadivam



பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூலின் வெளியீட்டு விழா சென்னை தியாகராயாநகர் தியாகராயார் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் தனக்கும் சகோதரர் வைகோ, கொளத்தூர் மணி ஆகிய தங்கள் மூவருக்கு மட்டுமே தெரிந்த பல இரகசியங்களை இந்நூலில் பதிவு செய்துள்ளதை தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் 6.00 மணியளவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் தொகுப்புரையினை முனைவர் த.செயராமன் நிகழ்த்த வரவேற்புரையினை செ.ப.முத்தமிழ் மணி நிகழ்த்தினார் தொடர்ந்து தலைமையுரையினை உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் நிகழ்த்தினார். பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூலினை ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுவைக்க வருகை தந்த தமிழ் உணர்வாளர்கள் பிரதிகளை பெற்றுக்கொண்டார்கள்.

நிகழ்வில் தொடர்ந்து கருத்துரையினை தமிழ்தேசியக்கட்சி செயலாளர் கணக்காயர் மு.பாலசுப்பிரமணியம், மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன் ,உலகத்தமிழர் பேரமைப்பு பொருளாளர் சா.சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்த்த வாழ்த்துரையினை திருச்சி கே. சௌந்தரராசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நல்லக்கண்ணு, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த்தேச பொதுவுடைமைக்கட்சித் தலைவர் பெ.மணியரசன், ஆகியோர் நிகழ்த்தினார்கள், நிகழ்வில் சிறப்புரையினை வைகோ நிகழ்த்தினார். ஏற்புரையினை நூலாசிரியர் பழநொடுமாறன் அவர்கள் நிகழ்த்தினார்.
தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், தன் கைப்பட எட்டப்பன் கருணாநிதியை பற்றி நெடுமாறன் ஐயாவிற்கு எழுதிய கடிதம். ((நூல் :- பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் ஆசிரியர் : பழ . நெடுமாறன்) பக்- 113 23-7--97 தமிழீழம் அன்பிற்கும் மதிப்பிற்குரிய அண்ணாவிற்கு நான் நலமாயுள்ளேன்.அது போல் நீங்களும் நலமேயிருக்க தமிழ் அன்னையை வேண்டுகிறேன். இப்போது இங்கு மருந்து போருட்கலுக்குத்தான் தட்டுப்பாடு அண்ணா அரும் பெரும் சேவியர் மூலம் ஒழுங்கு செய்த மருந்து பொருட்கள எமக்கு கிடைத்தன .நான் அதற்குரிய ஒரு நன்றி கடிதம் அவருக்கு கொடுத்துள்ளேன் அண்ணா. அதை நீங்களே அவரிடம் நேரில் கொடுத்து விடுங்கள்.மருந்து பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு 50 லட்சம் வரையிலான பணம் தமிழ் நாட்டு போலீசாரிடம் பிடிப்பட்டுள்ளது .எமக்கு இங்கு இருக்கும் எவ்வளவோ பண கஷ்டத்தின் மத்தியிலும் மருந்து பொருட்கள் வாங்க அனுப்பிய பணம் தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞ்சர் ஆட்சியிலேயே பறிக்கப் படுவதுதான் வேதனையை தருகிறது .ஆனாலும் உங்கள் உதவி எமக்கு ஒரு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது .எங்களுக்கு இப்போதைக்கு தேவையானது மருந்து பொருட்கள் தான் தொடர்ந்தும் இது போல மருந்து பொருட்கள கிடைக்க உதவி செய்யுங்கள் அண்ணா இங்கு எமது போராட்டத்திற்கு உதவியாக இருக்கும் அண்ணா இப்படிக்கு வே .பிரபாகரன்

myanmar tamils



பர்மாவில் , கோவில் ஒன்றில் திருவிழா , அங்கே நமது தமிழர்களை சந்திக்கும் போது அவர்களுக்கு நமது தமிழ் தேசிய இன விடுதலையை பற்றி தெரியப்படுத்தவும் , உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்களாய் ஒன்று படவேண்டும் என்றும் ஈழ விடுதலைக்காக அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கும் துண்டு சீட்டை சகோதரி ஒருவர் விநியோகம் செய்தபோது எடுத்த புகைப்படம்

annan prabhakaran poster in tamilnadu



இந்திய அரசே விடுதலைபுலிகள் மீது சுமதி உள்ள தடைகளை நீக்கு..

LinkWithin

Related Posts with Thumbnails