Theneer Pookal, நவாலியூர் தீ (போலி)



தேனீர் பூக்கள் எனும் பெயரில் கருணாவின் ஒன்றுவிட்ட சித்தப்பா பையன் ஒருவர் கருணாவை போலவே பேஸ்புக்கில் செயல் பட்டு கொண்டு இருக்கிறார் இவரது வேலை என்ன வென்றால் தமிழீழ சிந்தனைகளை உலகுக்கு எடுத்து சொல்லும் பெயர்களில் போலியாக id create செய்து கொண்டு பேஸ்புக் தோழர்களை குழப்புவதுதான் துரோகங்களை எதிர் கொள்ள தயராக நாம் இருக்கவேண்டும் இது போன்ற துரோகிகளை கண்டுபிடித்து பேஸ்புக் உலகுக்கு சொல்லவேண்டும்..
ஏற்கனவே எழில்வேணியை தோலுரித்து துரத்திவிட்டோம்..

நவாலியூர் தீ என்ற தமிழ் உணர்வாளர் பெயரில் அவர் உருவாக்கியுள்ள id -க்களில் சில

http://ta-in.facebook.com/people/navaliyur-ti/100001538506994

http://ta-in.facebook.com/people/navaliyur-ti/100000382116338

boycott fairever fairness cream




asin answer my question.
how to apply fairever cream in
my killed Tamil sister face?

i think it's only for you because you only got genocide face..

அசின் நடிக்கும் படத்தை புறக்கணிப்போம்.இங்கு கிளிக் செய்யவும்


அசினின் இலங்கை சுற்றுலாவுக்கு இங்கு கிளிக் செய்யவும்

Cricket england vs pakistan lords match fixing,spot fixing Scandal, mathi cartoon



பால் போடுவதற்கு முன்பு நடுவர் அவுட் கொடுக்க வேண்டுமென்றால் சற்று அமொண்ட் அதிகமாகும் அவ்வளவுதான்..

காமன்வெல்த் விளையாட்டு துக்ளக் கார்ட்டூன்



கொள்ளையர்களின் கூடாரமாகியது காமன்வெல்த் விளையாட்டு அரங்கங்கள்..
இவையனைத்தும் இந்திய மக்களின் வரிப்பணம் என்பது பற்றி எவருக்கும் கவலை இல்லை இன்னும் சொல்லப்போனால் அது தான் கொள்ளையர்களுக்கு ஆனந்தம் அளிக்க கூடிய விடயமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை..

thagaval ariyum urimai sattam,தகவல் அறியும் உரிமை சட்டம்,tirupur mdmk



தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உள்துறை அமைச்சகத்திடம் இலங்கையிடமிருந்து பிரபாகரனின் மரணசான்றிழை வாங்கிவிட்டிர்களா? என திருப்பூர் மதிமுக பிரமுகர் மணி அவர்கள் கேட்டிருந்தார்..
அதற்கு உள்துறை அமைச்சகம் அளித்திருக்கும் பதில் "உங்களது கேள்விக்கான பதில் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிற்து"

karunanidhi T-shirt,i'am still life first come's my family! then sonja gandhi! who cares' about tamil naadu's fisherman.



முதலில் என் குடும்பம் பிறகு சோனியா தமிழக மீனவர்கள் எப்படிப்போனால் எனக்கு என்ன? அதை பற்றி ஏன் கவலைப்படவேண்டும்...

adolf hitler and sonia gandhi srilanka genoside T shirt

new zealand Supreme court says LTTE is a Political organization

நியூசி நீதிமன்றின் தீர்ப்பு:புலிகள் அரசியல்அமைப்பு



சமீபத்தில் நியூசிலாந்தில் அரசியல் தஞ்சம்கோரி நிராகரிக்கப்பட்ட மூவரில் இருவர் நாடு கடத்தப்பட்டனர். இருப்பினும் அதில் ஒருவர் அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், துணிச்சலான தீர்ப்பை வழங்கியுள்ளது. அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், அவரே அதை ஒத்துக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள் என்று கூறியுள்ளார்.

இறைமை உள்ள இனம் என்ற அடிப்படையில் அவர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும், அதற்காகவே விடுதலைப் புலிகள் போராடியதாகவும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு, நின்று விடாது புலிகள் ஒரு போராட்ட அமைப்பு என்றும் அது அரசியல் ரீதியாக தற்போது இயங்கிவருவதாகவும் கூறியுள்ளார். அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அந்த தமிழருக்கு நியூசிலாந்து அரசு உடனே அகதிகள் அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியா புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக பட்டியலிட்டபோதும், நியூசிலாந்து அதற்கான முஸ்தீபில் இறங்கியவேளை நியூசிலாந்து தமிழர்களால் எடுக்கப்பட்ட பாரிய போராட்டங்களால் அவை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நியூசிலாந்தில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை முன் உதாரணமாகக் கொண்டு, புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள நாடுகளில் அத் தடையை நீக்க தமிழ் அமைப்புகள் ஆவன செய்யவேண்டும். தமிழர் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் இல்லாத போராட்டம் கிடையாது, அவர்களைப் புறம் தள்ளி தேசிய கொடியை ஏந்திச் செல்ல, அரசு அனுமதித்தாலும், அதனை போராட்ட இடங்களுக்கு கொண்டுவரவேண்டாம் எனச் சிலர் கூறிவருவது முதலில் நிறுத்தப்படவேண்டும்.

நியூசிலாந்தில் உள்ள ஒரு வேற்றின நீதிபதிக்கு புரிந்துள்ள விடயம் தமிழ் தலைவர்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை என்பதே ஆச்சரியம், இல்லை புரிந்தும் புரியாதவர்கள் போல நடிக்கிறார்களா என்ற சந்தேகமும் உருவாகிறது. புரியவில்லை என்றால் இனிவரும் காலங்களில் மக்கள் அதனை மிக நன்றாக விளக்குவார்கள்....

Remove LTTE ban in india - tamilnadu BJP,bhrathiya janatha party,பி.ஜே.பி,பாரதிய ஜனதா கட்சி


விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடை நீக்க

விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடையை நீக்க வேண்டுமா? ஆம் எனில், செப். 21ம் தேதி இந்திய உள்துறை அலுவலகம் ஏற்பாடு செய்யும் நீதிபதியிடம் சொல்லுங்கள்

இந்தியாவில் விடுதலைப்புலிகளின் வருங்கால நிலையைப் பற்றி இந்திய உள்துறை அலுவலகம் இன்று (27.08.2010) மாலை 3.30 மணியளவில், டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி விக்ரம் சிங் குப்தா தலைமையில் மக்களின் கருத்தை அறிந்து கொள்ள பொது விசாரணையை, டெல்லி உயர்நீதி மன்றம் எண் : 2ல் நடைபெற்றது.

விடுதலைப்புலிகள் குறித்த மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் பொது விசாரணைக்கு தமிழக தலைவர்கள் என கூறிக்கொள்ளும் ஒருவர் கூட இன்று செல்லவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.

தமிழகத்திலிருந்து பி.ஜே.பியை சார்ந்த ஒருவர் மட்டும் கலந்து கொண்டார். அவர் தனது கருத்தை கூறும் போது, விடுதலைப்புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்டு விட்டதாய் இலங்கை அரசு கூறுகிறது. இதனால், இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீது தடை விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தனது தரப்பு வாதத்தை பதிவு செய்தார்.

விடுதலைப்புலிகள் குறித்த மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் பொது விசாரணைக்கு இன்று ஒருவரை தவிர வேறு யாரும் கலந்து கொள்ளாததால், நீதிபதி இந்திய உள்துறை அலுவலகத்தை பொது விசாரணையை அடுத்த மாதம் 21ம் தேதி முடிந்தால் சென்னையிலோ அல்லது டெல்லியிலோ நடத்தப்பட வேண்டும் என கோர உள்ளதாய் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநேகமாய், நீதிபதியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில், தமிழக தலைவர்கள் சென்னையிலாவது விடுதலைப்புலிகள் குறித்த மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் பொது விசாரணைக்கு செல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

nuclear deal agreement cartoon,anu ayudham oppandam madan cartoon



அனு ஆயுத ஒப்பந்தால் ஏற்படவிருக்கும் பிரச்சணைகளை எடுத்துச்சொல்லும் மதன் கார்ட்டூன்

major nilavan,captain madhan 17th anniversary


இரண்டு குஞ்சுகளின்..

கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள் (26.08.1993) நேற்றாகும்.

“நெருப்பாற்றில்” ஒரு நினைவு நாள்....
26.08.1993

கடந்து வந்த பாதையில்
நட்டு வந்த விழுதுகளை
நினைவில் கொள்கிறேன்...

படகேறி நீர் எம்
படகு பயணம் காத்தீர்
பகையழித்து நீர் எம்
பயணத்தில் பாதை தந்தீர்

வரதன் மதன் என்று
நாளிதலில் பார்த்தது தவிர
எதுவும் அறிந்த தில்லை அன்று

வாழ்வே மாறி இன்று
வால் பிடிப்போர் இருக்க..!
கால் இழந்தும் நீங்கள்
பாதை மாறியதில்லை அன்று

மீன்பாடும் தேன் நாட்டில்
வந்துதித்த எங்கள் முத்துக்களே
நீர் பிறந்த ஊர் மட்டும் - அல்ல
உங்கள் கல்லரைகள் கூட
பூதங்களின் ஆட்சியில் தான்

கனவுகள் கலைந்து
நிஜத்தில் வாழ்வதாய்
நம்மில் பலர்
ஒரு மயக்க நிலைக்குள் இன்று

மதிகள் தான் மயங்கி
மனதில் இன்னும் மொட்டுகளாய்
உங்கள் நினைவு தான்

நெடுந் தொலைவு வந்து விட்டோம்
நினைவுகள் மட்டும்
உங்கள் அருகில்
படுத்துறங்கும் வேளை கூட
பாதி கனவு
விட்ட குறை தான்

கனவாகி போயிடுமோ உங்கள்
நிகழ்கால வாழ்க்கை என்ற
ஒரு உறுத்தல் என்னுள்ளே

பகையழித்து நீர் தந்த
எம் வாழ்வு
பகைக்கு அஞ்சி
பாழாகி போவதா
“ஒரு போதும் நடவாது”

இருக்கும் வரை
உணர்வோடு வாழ்வோம்
இல்லை என்றால்
சருகாகி போகவும் தயார்

நினைவில் நீங்கள் வாழும்
உணர்வுள்ள மனிதர் இன்றும் உண்டு
உணர்வை விற்று
ஜடமாகி வாழ மாட்டோம்

பதிவு :கரும்புலிகள் உயிராயுதம்

karunanidhi parattu vizha blogspot,கருணாநிதி பாராட்டு விழாக்கள், bala cartoon, பாலா கருத்துப்படம்



தலைவரின் பாராட்டு விழா மோகம்..
விரைவில்..
அதிகமாக பாரட்டு விழா கண்டதற்கு ஒரு பாராட்டு விழா எடுக்க சொன்னாலும் சொல்லுவார் என்பதை சித்திகரிக்கும் பாலா-வின் கருத்துப்படம்..

ஈழம் அன்றும் இன்றும்

எம் அண்ணனின் ஆட்சியில்

தமிழ் போராளிகளின் நினைவு சிலைகள்..


உலக,சிங்கள காட்டுமிரண்டிகளின் கொடுரங்களுக்கு பிறகு..

இடித்து ,இறப்புக்கு மரியாதை கொடுக்காது,இறந்த பின்னரும் இன வெறியை காட்டும் சிங்களம்

january 29,ஜனவரி 29,முத்துக்குமார் ஆவணப்படம்



முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம் ஜனவரி-29





surendra cartoon about common wealth games



இந்தியா டெல்லியில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கான ஆயத்த பணிகளில் நடைபெற்ற ஊழல்களை சித்திகரிக்கும் சுரேந்தராவின் கருத்துப்படம்

jegan and devaki walk for justice from murugathasan ground to european union headquarters (842KM)






சிவந்தன் ஏந்திய தீ தொடர்கிறது! பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கி...சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது. முருகதாசன் திடலில் இருந்து பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம். தமிழ் மக்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கின்ற விடுதலைத் தீ அணையாது. மீண்டும் தொடங்குகிறது 842கி.மீற்றர் நடைப்பயணம்.
எதிர்வரும் 28.08.2010 சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனக்கோரி, ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் அமைந்துள்ள முருகதாசன் திடலில் இருந்து, பெல்ஜியம் ஐரோப்பியத் தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம் தொடரப்படவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்ததிலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கும், சிங்கள மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஒரு வகையில் உற்சாகம் வழங்கி உதவி புரிந்த ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகம் நோக்கிய நடைப்பயணம்.
இந்த நீதிப் பயணத்தை முதியவர் ஜெகன் (அவுஸ்திரேலியா) அவர்களும், தேவகி அவர்களும் முன்னெடுத்துள்ளனர்.
நீதிப்பயணமானது 28.08.2010 அன்று ஜெனீவாவில் ஆரம்பித்து, பிரான்ஸ், ஜேர்மன், லக்சம்பேர்க் ஊடாக 26.09.2010 தியாகதீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவு நாளன்று பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத் தலைமையக முன்றலில் நிறைவுக்கு வரவுள்ளது.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்றார் எங்கள் திலீபன் அண்ணா.
உலகத் தமிழ் உறவுகளே! அனைவரும் ஒன்று திரளுவோம்

gampaha pettah, innocent monkeys are looking killer monkeys



இலங்கையில் குரங்குகளின் தொந்தரவு அதிகமாம்..பேருந்தில் இருக்கும் போஸ்டரில் உள்ள கொலைக்கார குரங்ககுகளை பார்க்கும் அப்பாவி குரங்குகள்..

mdmk vaiko answer for mahinda rajapaksa guest k.p ( kumaran pathmanathan )

கே.பியின் குற்றச்சாட்டிற்கு வைகோ பதில்



இலங்கைத் தீவில் போர்நிறுத்தம் ஏற்படாமல் போனதற்கு வைகோதான் காரணம் என்று, சிங்கள அரசின் விருந்தாளியாக தற்போது கொழும்பில் இருக்கின்ற குமரன் பத்மநாதன், என் மீது குற்றம் சாட்டி இருக்கிறார். வைகோவின் தேர்தல் பேராசையால், விடுதலைப்புலிகள் பலியாக நேர்ந்தது என்று, ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார். இப்படிக் கூறிய குமரன் பத்மநாதன், 2002 ஆம் ஆண்டு இறுதியில், சர்வதேசப் பொறுப்பில் இருந்து பிரபாகரன் அவர்களால் நீக்கி வைக்கப்பட்டவர். பகைவர்களுக்குக் கையாளாகி விடக்கூடாதே என்ற நிலையில், 2008 ஆம் ஆண்டில், சர்வதேச ஊடகத் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டவர்.

2009 மே 18 ஆம் தேதியன்று, பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார் என்று அறிவித்துவிட்டு, மூன்றாம் நாள் பிரபாகரன் இறந்து விட்டார் ; இனி விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நானே தலைவர் என்றும், தன்னைத்தான் பிரபாகரன் தலைவர் பொறுப்பை வகிக்கச் சொன்னார் என்றும், ஒரு உலக மகா பொய்யைச் சொல்லி, தனக்குத்தானே முடிசூடிக் கொண்டவர்.
இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்படும், தமிழ் ஈழ மக்களின் போராட்ட வரலாற்றில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட துரோகப்படலத்தின் தொடர்ச்சியாக, தற்போது குமரன் பத்மநாதன் தமிழ் ஈழ விடுதலைக்கு எதிராக, கொலைபாதகன் ராஜபக்சே அரசின் கைக்கூலியாக, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்கிறார்.

அவர் தனது பேட்டியில், தமிழ் ஈழம் என்பது அழிந்து போன லட்சியம் என்றும், விடுதலைப்புலிகள் சாதாரண மக்கள் மீது வன்முறையை ஏவி, துன்பம் விளைவித்ததற்காகத் தான் வருந்துவதாகவும், அதற்காக இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தாம் மன்னிப்புக் கோருவதாகவும் கூறி உள்ளார்.
இலங்கையில் போரை நிறுத்துவதற்கு, தி.மு.க. தரப்பிலே முயற்சித்ததாகவும், இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அதற்கான ஒரு திட்டத்தைச் சொன்னதாகவும், அந்தத் திட்டத்தின்படி, விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரண் அடைகிறோம் என்று அறிவிக்க வேண்டும்; சுதந்திரத் தமிழ் ஈழம் என்ற குறிக்கோளைக் கைவிட்டு, மாற்று அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்க வேண்டும் என்றும், அப்படி ஒரு அறிவிப்பை சிதம்பரமே தயாரித்து இருந்ததாகவும் பத்மநாதன் கூறி உள்ளார்.

இந்தத் திட்டம் குறித்து, வைகோவுக்கும், பழ. நெடுமாறனுக்கும் தெரிவிக்கக் கூடாது என்றும், தேர்தல் காலமாதலால், போர் நிறுத்தம் ஏற்பட்டால் காங்கிரஸ்-தி.மு.க.வுக்குப் பெயர் வந்துவிடும் என்றும், அதனால், இந்தத் திட்டத்தைப் புலிகள் ஏற்க விடாமல் தடுக்க முயல்வோம் என்றும், புலிகளின் அரசியல் பிரிவுச் செயலாளர் நடேசனிடம் கூறப்பட்டதாகவும், நடேசன் அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனிடம் கூறியதால், மகேந்திரன் என்னிடம் கூறி விட்டாராம்.

தமிழ் ஈழ விடுதலைக் கோரிக்கையைப் புலிகள் கைவிட்டால், விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் ஆதரவு தர மாட்டோம் என்று நடேசனிடம் நான் கூறி விட்டதால், இந்தப் போர் நிறுத்த முயற்சி கைகூடாமல் போனதாகவும், பத்மநாதன் என் மீது பழி சுமத்தி உள்ளார்.

பத்மநாதன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய். போர்நிறுத்தம் ஏற்பட்டால், என்னைவிட, பழ.நெடுமாறனை விட நிம்மதி அடைகிறவர்கள் யாரும் இருக்க முடியாது. எவ்வகையிலாவது போர்நிறுத்தம் ஏற்பட்டு விடாதா என்று நாங்கள் துடித்தோம்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், புலிகள் அமைப்புக்கும், அவர்கள் அங்கே எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றி, எந்தக்காலத்திலும் நாங்கள் யோசனை கூறியது கிடையாது. ஈழத்தின் நிலைமைக்கு ஏற்ப, அம்மக்களின் நலனுக்கு ஏற்ற முடிவுகளை, பிரபாகரன் மேற்கொள்வார்.

இதே பத்மநாதன் கொடுத்த பேட்டியில், அவரது கூற்றையே அவர் முரண்பட்டு இன்னொரு இடத்தில் சொல்கிறார்.
2008 டிசம்பர் 31 இல் பிரபாகரன் தன்னோடு தொடர்பு கொண்டதாகவும், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, முக்கியத் தலைவர்களை வெளிநாட்டுக்கு வெளியேற்றி, சில வெளிநாடுகளின் உதவியோடு போர்நிறுத்தம் ஏற்படுத்தும் யோசனையைத் தாம் கூறியதாகவும், அதற்கு பிரபாகரன் அவர்கள், இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரித்து விட்டதாகவும் கூறுகிறார்.

ஆயுதங்களைக் கீழே போடவே ஒப்புக்கொள்ளாத பிரபாகரன், சிதம்பரத்தின் யோசனைப்படி ஆயுதங்களையும் கீழே போட்டு, சரண் அடைந்து தமிழ் ஈழத்தையும் கைவிட்டு விட, கனவிலாவது உடன்படுவாரா?
நான் இதில் எதிர்ப்புத் தெரிவித்து, அதனால் முயற்சி நின்று போனதாக அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள்.
அதே பேட்டியில், இன்னொரு இடத்தில், பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி, தன்னிடம், தனது தந்தை, தாய், தங்கை, தம்பியைப் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யச் சொன்னதாகவும், ஹெலிகாப்டர் மூலமும், பின்னர் கப்பல் மூலமும் அவர்களைத் தப்புவித்து, வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல, ஒரு ஆசிய நாட்டுடனும், இரண்டு ஆப்பிரிக்க நாடுகளுடனும் தான் திட்டமிட்டதாகவும், நார்வேயில் உள்ள நெடியவன் அதற்குப் பணம் கொடுக்காமலும், புலிகளின் வெளிநாட்டு விமானப்பிரிவுத் தலைவர் அச்சுதன், விமானிகளை அனுப்பாமல் கெடுத்து விட்டார்கள் என்றும் கூறி உள்ளார்.
ஈழத்தமிழ் மக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு தப்பிச் செல்ல பிரபாகரன் சம்மதிக்க மாட்டார் என்று சொல்லிவிட்டு, பிறிதொரு இடத்தில் கடைசியாக தப்பிச் செல்ல வருவார் என்றும் கூறி உள்ளார்.

குமரன் பத்மநாதன் கோலாலம்பூரில் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, விமானத்தில் வசதியுள்ள உயர்வகுப்பில் தான் பயணித்ததாகவும், கொழும்பு சென்றவுடன் ராஜபக்சேயின் சகோதரன், தமிழ் ஈழ மக்களின் படுகொலைக்குக் காரணமான கொடியோருள் ஒருவனான ராணுவச் செயலாளர் கொத்தபய ராஜபக்சே வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு ராஜபக்சே தம்மை அன்போடு கைகுலுக்கி வரவேற்று கேக்கும், தேநீரும் தந்து உபசரித்ததாகவும், மிக்க கனிவோடு தம்மிடம் பேசியதாகவும், அதன்பின் தான் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டதாகவும், அதிகாரி ஒருவர் தனக்கு எந்நேரமும் உதவியதாகவும், உலகில் யாருடனும் பேசும் தொலைபேசி வசதியும், தொடர்புகொள்ள மின் அஞ்சல் வசதியும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

சிங்கள அரசுக்கும், தனக்கும் பரஸ்பரப் புரிதலும், நம்பிக்கையும், நட்பும் வளர்ந்துகொண்டே வருவதாகவும் சொல்லி உள்ளார். கொத்தபயவிடம், யுத்தம் நீண்ட காலத்துக்கு முன்பே யுத்தம் முடிந்து விட்டதாகக் கூறினாராம்.
கடல்புலிகளின் தலைவர் சூசை, அரசியல் பிரிவுச் செயலாளராக இருந்த தமிழ்செல்வன், நிதிப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோர் அமைப்பிலே ஆதிக்கம் செய்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். ஆனால், 2002 கடைசியில் பிரபாகரன் தன்னைப் பொறுப்பில் இருந்து விலகச் சொன்னதாகவும் ஒப்புக் கொண்டு உள்ளார்.
இமாலய ஆபத்துகளே தன்னைச் சூழ்ந்தாலும், பிரபாகரன் இலட்சியத்தைக் கைவிட மாட்டார், சரண் அடைய மாட்டார் என்பதை, புலிகளின் எதிரிகளும் ஒப்புக் கொள்வார்கள்.
2008 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி, பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரையில் திட்டவட்டமாக அவர் ஒன்றை உலகத்துக்கு அறிவித்தார்.

பெரிய ஆயுத பலம் கொண்ட பாரிய சக்திகளை எதிர்த்து நாங்கள் நிற்கிறோம். எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும், எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தனை சக்திகள் எதிர்கொண்டாலும், தமிழரின் சுதந்திர விடிவுக்காகத் தொடர்ந்து நாம் போராடுவோம். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரம் ஆகிவிட்ட எமது மாவீரர்களின் வழியே சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமாக! புலிகளின் தாகம், தமிழ் ஈழத் தாயகம்.
தமிழ் ஈழ விடுதலையைத் தன் உயிரினும் மேலான இலட்சியமாகக் கொண்டு இருந்த பிரபாகரனை, அதைக் கைவிடச் சொல்லி, இந்திய அரசினர் யோசனை சொன்னார்களாம்.

விஸ்வரூபம் எடுக்கின்ற கேள்வி யாதெனில், இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் என்று உலகின் பல நாடுகள் வேண்டுகோள் விடுத்து, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், இந்திய அரசு ஏன் ஒப்புக்குகூட போர் நிறுத்தம் என்ற சொல்லை இலங்கை அரசிடம் கூறவில்லை?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் போர் நிறுத்தத்துக்கு ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 48 மணி நேரத்தில், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்து விட்டு வந்தபோது, பிரதமர் வீட்டு வாயிலில் பத்திரிக்கையாளர்கள் இந்தியப் பிரதமர் போர் நிறுத்தம் வேண்டினாரா? என்று கேட்டனர்.
ஆத்திரத்தோடும், எரிச்சலோடும், போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது; விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்று உடம்பை முறுக்கிக் கொண்டு திமிராகப் பேசும் தைரியம் அந்த அதிபருக்கு எப்படி வந்தது? இந்திய அரசு கொடுத்தத ஊக்கம்தான் காரணம்.
இதைத்தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் சொல்லி வருகிறேன். இலங்கையில், சிங்கள அரசு புலிகளுக்கு எதிராக நடத்தும் போரை இயக்கியதும், திட்டமிட்டதும், ரடார்களும், ஆயுதங்களும், ஆயிரம் கோடி வட்டி இல்லாத பணமும் கொடுத்தது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான். பிரதமரே இலங்கைக்குத் தாங்கள் ஆயுத உதவி செய்ததை ஒப்புக்கொண்டு, 2008 அக்டோபர் 2 இல் எனக்கு கடிதம் எழுதி உள்ளார்.


வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி அவர்களின் கோபாலபுரம் வீட்டு வாசலில், போர் நிறுத்தத்தை இந்தியா கேட்குமா? என்று செய்தியாளர்கள் வினவியதற்கு எரிச்சலோடு பதில் சொன்னார்: அது எங்கள் வேலை அல்ல; சிங்கள அரசுக்கும்-புலிகளுக்கும் நடக்கும் சண்டை என்றார்.
2009 பிப்ரவரி 18 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் அதே பிரணாப் முகர்ஜி, அப்பாவி தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்கிறார்கள் என்று அக்கிரமமான குற்றசாட்டையும் கூறினார்.


இந்திய-இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் 2007 இல் செய்யப்பட்டது. இந்தியக் கடற்படையின் உதவியோடு விடுதலைப் புலிகளுக்கு வந்த எட்டுக் கப்பல்களை தாங்கள் கடலில் மூழ்கடித்ததாக இலங்கையில் கடற்படைத் தளபதி வசந்த கரனன்கொட 2009 மார்ச்சில் உண்மையைப் போட்டு உடைத்து விட்டார்.
ராஜபக்சே அறிவித்த ஒரு மூவர் குழுவும், மன்மோகன் சிங்க அறிவித்த மூவர் குழுவும், டெல்லியில் ஐந்து முறையும் கொழும்பில் மூன்று முறையும் சந்தித்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி வெற்றி பெறத் திட்டமிட்டன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே விடுதலைப் புலிகளைப் போரில் முடித்துவிட வேண்டும் என்று இந்திய அரசு விரும்புவதாக, இலங்கை அமைச்சர் ஒருவரே கூறிவிட்டார்.
இலங்கை நாடாளுமன்றத்தில், இந்திய உதவியால்தான் புலிகளைத் தோற்கடித்தோம் என்றே அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.


லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, பிஞ்சுக் குழந்தைகள்-கர்ப்பிணி பெண்கள் - முதியவர்கள் உட்பட படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய அரசும் ஒரு காரணம். ராஜபக்சேவின் போர்க்குற்றத்தில், இந்தியாவின் காஙகிரஸ் அரசுக்கும் பங்கு உண்டு என்று தொடர்ந்து நான் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி வருகிறேன்.
அதற்காக என் மீது தேசத் துரோக குற்றச்சாட்டில் இரண்டு வழக்குகளை கருணாநிதி அரசு ஏவி உள்ளது.
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இரத்தப் பழிக்கு இந்திய அரசு ஆளாகி விட்டது; குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்; எங்கள் எதிர்காலச் சந்ததிகள் இன்றைய இந்திய அரசை மன்னிக்க மாட்டார்கள் என்று எழுத்து மூலமாக பிரதமரிடம் குற்றம் சாட்டி உள்ளேன்.


இந்தத் தமிழ் இனத் துரோகச் செயலுக்கு, கலைஞர் கருணாநிதி உடந்தையாகச் செயல்பட்டார் என்பதே என் குற்றச்சாட்டு.
இந்தப் பழியில் இருந்து தப்பிக்கவும், என் மீதே பழி சுமத்தவும், கடந்த ஆண்டிலேயே உளவுத்துறையின் ஏற்பாட்டில், பத்மநாதன் இப்போது அவிழ்த்து விட்டு உள்ள கோயபல்ஸ் பொய்களை அப்போதே சொன்னார்கள். அது எடுபடவில்லை.
அனைத்து உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக இராஜபக்சே நிறுத்தப்படுவார் என்று கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ள என்னைக் களங்கப்படுத்த, இராஜபக்சேவின் கைக்கூலி ஆகிவிட்ட குமரன் பத்மநாதனைத் தற்போது பயன்படுத்தி உள்ளார்கள்.


இதில் வேதனை என்னவெனில், நாடாளுமன்றத் தேர்தலில் பதவி ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தைத் தடுத்தேன் என்று குமரன் பத்மநாதன் உளறி இருக்கிறார். மத்திய அமைச்சர் பதவிகள் என்னை நாடிவந்தபோதும் நிராகரித்தவன், 2004ஆம் ஆண்டில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்தவன் நான்.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடேசன் என்னிடம் பேசும்போது, தொகுதி உடன்பாடு முடிந்துவிட்டதா அண்ணா? என்று கேட்டார்.
கொஞ்சம் நெருடல் இருக்கிறது. ஆனால், அணி மாற மாட்டேன்; தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என்றேன்.
அதற்கு அவர் நீங்கள் போட்டியிட சிவகாசித் தொகுதி ஒதுக்கப்படுகிறதா? என்றார்.
தற்போது விருதுநகர் தொகுதி அது. ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படுகிறது என்றேன்.


நீங்கள் ஒருவர் நாடாளுமன்றத்துக்குச் சென்றால், ஐநூறு எம்.பி.க்கள் எங்களுக்காகச் செல்வதாக நினைப்போம். எனவே, நீங்கள் போட்டியிட வேண்டும் என்றார்.
நான் யோசிக்கிறேன் என்றேன். அன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் தொடர்பு கொண்டார். அண்ணா, பலத்த சண்டை நடக்கிறது. மிகவும் சிரமப்பட்டு சேட்டிலைட் போனில் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு நீங்கள் அவசியம் போட்டியிட வேண்டும் என்று தலைவர் பிரபாகரன் விரும்புகிறார் என்று குறிப்பிட்டார். இது குறித்து யோசித்து முடிவு எடுப்பேன் என்றேன்.
அன்று நடந்த இந்த உரையாடல் அருகில் இருந்த என் இயக்க முன்னோடிகளுக்குத் தெரியும்.

மே 10ஆம் தேதி அன்று கடற்புலிகளின் தலைவர் சூசை என்னிடம் பேசினார். காயம்பட்ட தமிழ் மக்களின் புண்களில் புழுக்கள் நெளிகின்றன. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் சிலரை இந்திய அரசு ஒரு குழுவை அனுப்பிப் பார்வையிடச் செய்யுங்கள் என்றார். மே 11 கடைசி நாள் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சொன்னேன். அடுத்த நான்கு நாட்களுக்குள் கோரமான போரை சிங்கள அரசு நடத்தப் போகிறது. இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்கத் திட்டமிட்டு விட்டனர். இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழர்களை அழிக்க சிங்கள அரசு மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு ஆயத்தமாகி விட்டது என்று குறிப்பிட்டேன்.
மே 12 அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் காடன் பிரௌன் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் உள்ளிட்டத் தலைவர்களுக்கு தமிழர்களின் துயரத்தை மின் அஞ்சலில் வடித்துப் போரை நிறுத்த மன்றாடி செய்தி அனுப்பினேன்.
நான் எந்தப் பதவியிலும் இல்லை. என் மனதில் ஏற்பட்ட பதற்றத்தால் நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்றே செயல்பட்டேன்.

மே 13 வாக்குப் பதிவு முடிந்து இரவு பத்தே கால் மணிக்கு நடேசன் என்னிடம் பேசினார். ஜெயித்துவிடலாமா? அண்ணா என்றார்.

என் தொகுதியில் கோடிக்கணக்கில் ஆளும் தரப்பு பணத்தைக் கொட்டிவிட்டது. சொற்ப வித்தியாசத்தில் ஜெயிக்கலாம் என்றேன். பிரபாகரன், நடேசன் உள்ளிட்டோரின் நிலைமையைப் பற்றிக் கவலைப்பட்டபோது “பயப்படாதீங்க அண்ணா! நாங்க வெல்வோம் அண்ணா! என்றார்.
சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரச்சொல்லி, அவரையும் அவரது மனைவியையும், புலித்தேவனையும் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது. துரோகிகளுக்கு வரலாற்றில் மன்னிப்புக் கிடையாது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எதிரிகளுக்குப் பிடித்துக் கொடுத்தான் ஜூடாஸ். 30 வெள்ளிக் காசுகளுக்காக இத்துரோகத்தைச் செய்த ஜூடாஸ், தனது குற்றத்தை உணர்ந்தவனாக உள்ளம் உடைந்து, முப்பது காசுகளை வீசி எறிந்துவிட்டு, மரக்கிளையில் கழுத்தில் சுருக்கிட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டு மடிந்தான். ஆனால், தன் துரோகத்தை உணர்ந்து வருந்தி தற்கொலை செய்து கொண்டான் என்று உலகில் எவரும் சொல்வது இல்லை.
தன் தவறை உணர்ந்த ஜூடாஸூக்கே மன்னிப்பு இல்லை என்றால், குமரன் பத்மநாதன் - கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்0பே கிடையாது.

துரோகிகளும், எதிரிகளும் தூற்றினால்தான் நீ சரியான பாதையில் போவதாக அர்த்தம் என்று தந்தை பெரியார் சொன்னார்.

ராஜபக்சே கூட்டம் வைகோவையும், நெடுமாறனையும் தூற்றுகின்றபோது அவர்கள் சரியான பாதையில் செல்கிறார்கள் என்பதை, தன்மானம் உள்ள தமிழர்கள் நன்கு அறிவார்கள்!


‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்
24.08.2010 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

madan cartoon,மன்மோகன் சிங்,இந்திய மக்கள் மதன் கார்ட்டூன்


தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் பல இருக்க..
இந்திய எம்பிக்களுக்கு பல மடங்கு சம்பள உயர்வு கொடுத்ததை சித்திகரிக்கும் மதனின் கருத்துப்படம்

mathi cartoon about kalaignar karunanidhi family,thinamani cartoon



கலைஞர் கருணாநிதியைப் பற்றிய தினமணியில் வெளிவந்த கார்ட்டூனிஸ்ட் மதியின் கருத்துப்படம்..

maaperum amaithi vazhi kandana porattam,கனடா மாபெரும் அமைதி வழி கண்டனப் போராட்டம்



தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசுக்கு துணை போகும் இந்திய அரசை கண்டித்து..
இடம்:டோரண்டோ இந்திய துணை தூதரம்
நாள்:27-08-2010

Maaveeran Pandara Vannian's Memorial Day August 25



ஈழத்து மாவீரன் பண்டார வன்னியன் நினைவு தினம் (ஆகஸ்ட் 25)

தமிழன் வெல்வான் தமிழீழம் மலரும்..

colonel raiyu kuilan 8 anniversary,கேணல் ராயு அண்ணையின் 8ம் ஆண்டு நினைவுநாள



கேணல் ராயு/குயிலன் ,கேணல் ராயு அண்ணையின் 8ம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார்
ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்

eelam people in thaai tamil nadu refugee camps













தாய் தமிழ்நாட்டில்(??!!) எம் மக்கள்..
ஏனோ இதயம் சற்றுக்கனமாக இருந்தாலும் எம் குழந்தையை பார்க்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத மனநிறைவு..

tamil kalai panpattu kazhagam,lt.colonel thavam award



இடம்:பாரிஸ்
தேதி:28-8-2010,சனிக்கிழமை
தமிழர் கலை பண்பாட்டு கழகம் நடத்து லெப்.கேனல் தவம் நினைவு விருதுக்கான குறும்படப்போட்டி

தமிழீழம் ஆனையிறவு,elephant pass,aanai iravu



தமிழர்களின் வீரத்தின் அடையாளத்திற்கு சொந்தமான இடம்..துரோகங்களினால் இன்று இந்நிலையில் இருந்தாலும் நிலை மாறும் தமிழன் வெல்வான் தமிழீழம் மலரும்..

We should write to Ubisoft to change the description of the game

A new video game (PSP & Wii) hunting Tamil Tigers
A new video game for Play Station (PSP) and Wii will be released in
November by the popular game maker -Ubisoft, tentatively titled Ghost
Recon 4 / "*Ghost Recon*: *Predator*". In the game, you'll lead your elite
squad on the hunt for terrorists / insurgents in the jungles of Sri Lanka.
Singhalese are going to have a field day with this. We (as induviduals
and organization) should write to Ubisoft to change the description of the
game. They may not budge but it is worth trying.

Here is the ubsoft's US contacts.


*Business office**
*625 Third Street
San Francisco - CA 94107
Tel: +1 (415) 547 4000
Fax: +1 (415) 547 4001


*Ubisoft Red Storm Entertainment*
2000 Centre Green Way
Suite 300
Cary, NC 27513
Tel: +1 (919) 460 1776


இதற்கு முன் இஸ்ரேல்-பாலஸ்தீனம் (அல்லது) இங்கிலாந்து-வடக்கு அயர்லாந்து குறித்த கணினி விளையாட்டுக்கள் வெளிவரும் முன் எழுந்த சர்ச்சைகளால் அவ்விளையாட்டு நிறுவனங்கள் பின்வாங்கிக் கொண்டன.

அவற்றைப் போலவே இந்த விளையாட்டும் வெளியிடப்படக் கூடாது.
ஒரு இனத்தின் வாழ்வாதாரப் போராட்டம் இன்னொருவரின் பொழுதுபோக்கு விளையாட்டாக மாறக்கூடாது. இச்செய்தியை அனைத்து நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள், உங்கள் நாட்டில் இருக்கும் UbiSoft நிறுவனத்தின் கிளைக்கோ அல்லது பிரான்சில் இருக்கும் தலைமையகத்துக்கோ உங்கள் கண்டனங்களை அனுப்புங்கள்.

இலங்கை அரசு ஒரு இனவழிப்பு அரசு என்றும், இவ்விளையாட்டு இனவழிப்பை நியாயப்படுத்தும் அநாகரிகச்செயல் என்றும், இவ்வகையான விளையாட்டுக்கள் இனங்களுக்கிடையேயான உறவுகளை மேலும் மோசமடையச் செய்யும் என்பதையும் அவர்களுக்குப் புரியவைப்போம். இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகப்போகும் இந்த விளையாட்டை வெளிவராமல் முடக்குவோம்! விரைந்து செயல்படுவோம்!

இத்தகைய காணொளி-கள் வரும் சந்ததியினரிடம், இலங்கை ராணுவத்தை வீரமிக்க போர்படையாகவும், வீரர்களாகவும், தமிழ் போராளிகளை தீவிரவாதிகளாகவும், மக்களை கேடையமாக பயன்படுத்தியவர்கள் என்று தவறாக ஒரு தோற்றத்தை பதிய வைத்துவிடும்.


Ubisoft's world wide Email's
======================

Ubisoft
Worldwide Headquarters
28, rue Armand Carrel
93100 Montreuil sous Bois
FRANCE
Tel: +33 (0)1 48 18 24 03
Fax: +33 (0)1 48 18 53 88
Mary Beth Henson
Corporate Media Relations Manager
mary-beth.henson@ubisoft.com,plecointe@ubisoft.fr,svallet@ubisoft.fr,ecarre@ubisoft.fr,
tiphaine.locqueneux@ubisoft.com,michael.ferron@ubisoft.com,chad.acers@ubisoft.com
eugen.knippel@ubisoft.com,bertrand.chaverot@ubisoft.com,marcel.keij@ubisoft.com
silvia.velicu@ubisoft.com,mary-beth.henson@ubisoft.com,cedric.orvoine@ubisoft.com,
chantal.cloutier@ubisoft.com,wendy.boylan@ubisoft.com,bao-zheng.wang@ubisoft.com,
Kelly.Wong@ubisoft.com,fredrik.moberg@ubisoft.com,ecarre@ubisoft.fr,
plecointe@ubisoft.fr,niels.bogdan@ubisoft.com,stefano.celentano@ubisoft.com,
ranko.fukui@ubisoft.com,frederic.gallemand@ubisoft.com,grzegorz.szabla@ubisoft.com,
erdei.jacint@ubisoft.com,elena.cazacu@ubisoft.com,san.kim@ubisoft.com,olivier.derotalier@ubisoft.com,
lucia.guzman@ubisoft.com,gil.grandjean@ubisoft.com,svetlana.gildebrandt@ubisoft.com,
Stefano.petrullo@ubisoft.com,Bryony.Benoy@ubisoft.com,webmaster@ubisoft.co.uk,
jaime.cottini@ubisoft.com,lisa.revelli@ubisoft.com,
http://www.ubisoftgroup.com/index.php?p=69

prabhavalavan & co marriage invitation. மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்..



கிளிநொச்சியில் சிங்களவனால் அன்று இறக்கப்பட்ட அண்ணின் படம் இன்று தமிழர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது என்றால் அது மிகையல்ல..

சென்னையில் திருமண அழைப்பிதழில் அண்ணன் தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள்..

எங்கள் அண்ணன்.. எங்கள் பெருமை..

முந்தைய திருமண வாழ்த்து பதாகைகளில் சில..

ஒரத்தநாட்டில்..

கலைஞர் கருணாநிதி பிறந்த திருவாரூர் திருக்குவளையில்..

பட்டுக்கோட்டையில்..

ayutha poojai ,saraswathi pooja,ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை


ஆயுத போராட்டம் இனி இல்லை என்பவர்களுக்கு ...
புதியவர்களே ஆயுதம் எம் மக்களின் காவல் அதை எமது புலிகள் தெய்வங்களாக போற்றினார்கள் இந்த ஆயுதங்கள் தான் எமக்கு உலகில் ஒரு அந்தஸ்த்தை தந்தது.போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலக்கு எப்போதும் மாறாது இது தலைவனின் கூற்று அதுதான் இப்போ நடக்கிறது.எமது போராட்டம் இப்போ ஒரு பின்னடைவை சந்தித்து இருகிறது இது நிரந்தரம் இல்லை மீண்டும் தமிழீழதிற்கான போர் நடக்கும்.சும்மா சுகந்திரம் கிடைக்காது போராட வேண்டும் விடுதலை கிடைக்கும் வரை போரடவேண்டும்.ஆயுதம் அதுதான் எமது விடுதலையை தரும் தற்காலிகமாக தலைமை ஆயுத போராட்டத்துக்கு ஓய்வு கொடுதிருக்கிறார் அதன் அர்த்தம் ஆயுத வழி போராட்டம் இனி இல்லை என்று அர்த்தம் இல்லை மக்களை காக்க தூக்கப்பட்ட ஆயுதம் பல்லாயிரம் மக்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்க்காக மௌனிக்க தலைமை எடுத்த முடிவு அது நிரந்தர முடிவு அல்ல ஒரு தற்கலிக முடிவே புதிய வடிவில் தலைவர் தலைமையில் மீண்டும் தமிழீழ அரசுக்கான ஆயுத போர் வெடிக்கும் அதுவரை புலத்தில் களத்தை எமக்கு சாதகமாக்குவோம்

paruthithurai,point pedro,பருத்தித்துறை


தமிழீழ பருத்திதுறை

தமிழன் வெல்வான்..தமிழீழம் மலரும்..

பார்வதி அம்மையார் தந்த தமிழின தலைவன் அண்ணன் பிரபாகரன்

எமது தலைவர்



இதுவரை உலகம் காணாத தலைவரே எமது தமிழ் மக்களுக்கு கிடைத்த தலைவர், வேறு எந்த இனத்திற்கும் கிடைக்கா பொக்கிஷம். யார் யாரோ எல்லாம் தன்னைத் தானே தலைவன் என்று சொன்ன போது. உலகே வியந்து பார்க்கும் எம் தலைவர் சொன்ன ஒரு வாக்கியம், என்னை ஒரு பொழுதும் தலைவனாக நான் நினைத்ததில்லை, என் இனத்திற்கு என்னால் முடிந்த எனது கடமையை செய்கிறேன் என்று சொன்னவர், தன்னை எப்பொழுதும் ஒரு போராளியாகவே அறிமுகப் படுத்துபவர்.

எமது மக்கள் படும் துன்பம் தாங்காமல் விளையாடும் வயதிலே களமாடப் புறப்பட்டவர், களமாடப் புறப்படும் முதல் விளையாட்டுக்கு கூட ஒரு நண்பனையும் தள்ளி விடாதவர்;. மலரினும் மெல்லிய மனம் படைத்தவர், சாதுவாய் இருந்தவர் மிரண்டார் சுருண்டது கொடிய சிங்களம். போராடப் புறப்படும் கணமே தீர்க்க தரிசனமான முடிவை எடுத்தார்; எம் தலைவர்;, எவரையும் நம்பிப் பயன் இல்லை. தன் கையே தனக்குதவி என்று. தன் கையில் இருந்த மோதிரத்தை விற்றும் சிறுக சிறுக உண்டியலில் பணம் சேர்த்தும் வாங்கினார்; முதல் ஆயுதம்.

எமது எதிரியை விட துரோகியே முகவும் கொடியவன் என அன்றே முடிவெடுத்த தலைவர், முதல் முதல் களை எடுத்தது எமது இனத் துரோகியை. அன்றில் இருந்து சிறுக சிறுக தன்னோடு நண்பர்களையும் சேர்த்து சிங்களத்திற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினார். பாதியில் வந்தவர்கள் பலர் பாதியிலே போக தான் கொண்ட லட்சியத்தில் உறுதியாய் நின்றவர். தமிழீழ விடுதலைப் புலிகள் என் தனது அமைப்பிற்கு பெயர் சூட்டினார். அமைப்பில் இருப்பவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க தமது அமைப்புக்கென ஒழுக்க விதிகளையும் விதித்தார். தனது வாழ்வில் தான் ஒழுக்க சீலரகவே வாழ்கின்றார்.

எமது இன விடுதலைக்காக போராட வரும் போராளிகள் உருதியானவர்களாக இருக்க பயிற்சி கொடுத்து. அவர்களின் நெஞ்சில் விடுதலை வேட்கையை மேலும் மெருகூட்டினார். தாய்த் தமிழுக்காய் எக்கணமும் களப் பலியாக துணிந்த போராளிகளை உருவாக்கினார், களமாடத் துணிந்த ஒவ்வொரு நெஞ்சங்களின் கழுத்திலும் நஞ்சை அணிவித்து தானும் அணிந்துகொண்டார். விடுதலை அமைப்பின் ரகசியங்களைக் காக்கவும் கொடிய சிங்களத்தின் கொடிய சித்திரவதைகளில் இருந்து தம்மைக் காகவே நஞ்சை அணிந்தனர்.

பல வல்லாதிக்க சக்திகள் எமது போராட்டத்தை மழுங்கடிக்க நினைத்த போதும், எமது போராட்டப் பாதையை மற்ற எத்தனித்த போதும், தமிழ் மக்களின் விடிவுக்கான விடுதலைப் போரை விட வேறு எந்த வழியும் மக்களுக்கு விடிவைத் தராது என அன்றே தரிசனமான முடிவை எடுத்தார் தலைவர். வல்லாதிக்க சக்திகள் பல அழுத்தங்களைக் கொடுத்த போதும் , பல இடையூறுகளை விளைவித்த போதும் வளைந்து கொடுக்காமல் துணிந்து நின்றவர் எம் தலைவர். இதை பொறுக்காத அணிய சக்திகள் போராளி அமைப்புக்களை தூண்டிவிட்டு பிளவுகளை ஏற்ட்ப்படுத்தியது அப்போதும் கலங்காமல் களமாடினர் எம் தலைவர்.

எமது இரண்டாயிரம் விடுதலைப் புலிகளை அழிக்க இரண்டு இலட்சம் ராணுவத்தை அனுப்பியது இந்தியா. இரண்டு இலட்சம் ராணுவம் இரண்டு வருடங்கள் களமாடி தமது இரண்டாயிரம் ராணுவத்தை இழந்தபோதும் எதவும் முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது இந்திய ராணுவம்.

எமக்கென தனியான அரசாங்கத்தை அமைத்தார் எம் தலைவர். எமது தமிழ் ஈழத்தின் வளங்களை வளர்க்க
விவசாய திணைக்களம்,
எமது மக்களின் வாழ்வை முன்நெடுக்க தமிழீழ வைப்பகம்,
மக்களுக்கான கைத்தொழில் உதவி,
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தமிழீழ காவல்த் துறை,
தமிழீழ நீதி மன்றம் தமிழீழ சட்டக் கல்லூரி,
போக்கு வரத்து திணைக்களம்,
வனவளத்துறை,
கால் நடை வளர்ப்பு,
மீன் வளத் துறை,
ஆனையிறவு உப்பளம் என அனைத்து வழிகளிலும் ஈழத்தின் செல்வங்களை மக்களுக்கு பயன் உள்ளதாக மாற்றி ஈழத்தை வளர வைத்தார்.
காந்தரூபன் அறிவுச்சோலை,
செஞ்சோலை சிறுவர் இல்லம்,
முதியவர் காப்பகம்,
அமைத்து எம் பிஞ்சுகளையும், முதிர்ந்த எமது தாய் தந்தையரையும் கண்ணுக்குள் வைத்துப் பார்த்தார்.

எமது தலைவர் சக போராளிகளை அண்ணனாகவும் தம்பி யாகவும் தங்கையாகவும், பிள்ளைகளாகவும் பார்த்தார். ஒவ்வொருவரை தனது தாய் தந்தை பிள்ளைகளாகப் பார்த்தார், அவர்களின் விடுதலைக்காய் தனது தாய் தந்தையை பிரிந்து பல ஆண்டுகள் வாழ்ந்தார். உறங்கும் நேரம் கூட கண்களை மூடிக்கொண்டு விடுதலையை மட்டுமே சிந்தித்தார்.

உலகே எம்மை ஏமாற்றி வார்த்தைகளில் மாத்திரம் மனித உரிமை. சிறுவர் பாதுகாப்பு பேசிக்கொண்டு, சிங்களத்தின் கொடிய யுத்ததிற்கு துணை போனது. எமது மக்களை சிங்களத்தோடு சேர்ந்து கொன்றொழித்தது. மக்களைக் காக்க வேறு வழி இன்றி புலியாய்ப் பாய்ந்த எமது தலைமை பதுங்கியது. பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என கொட்டம் அடித்து எமது மக்களைக் கொண்றொளித்த சிங்களம் எஞ்சி இருந்த மக்களைக் கொள்ள முடியாமல் தவித்தது, சரணடைய போகின்றோம் என சர்வதேசத்திடம் சொல்லிச் சென்றவர்களை ஏமாற்றி சமாதான பறவைகளைக் கொன்றது. மக்களைக் காக்க வேறு வழி இன்றி ரத்தம் கொதித்த போதும் மௌனம் காத்தது எமது தலைமை.

மௌனம் காக்கும் தலைமை உறங்கவில்லை. மௌனித்த துப்பாக்கிகள் மரணிக்கவில்லை, எமது தலைமையின் வழிகாட்டலுக்கு இன்றும் காத்திருக்கிறது எமது படை. விடுதலை பெரும் நாள் வரும். சாதாரன பிறப்புக்களே அழியும் எமது தலைவர் ஓர் அவதாரம் அவதாரங்கள் அழிவதில்லை. புலம் பெயர் தமிழர்களே புறப்படுங்கள் எமது தேசியத் தலைவரின் கீழ் மீண்டும் புத்துயிருடன் போராடத் தயாராகுங்கள்.
-தமிழ்ராஜ்
தமிழீழ மாணவன்

india vs srilanka dambulla one day cricket umpire Kumar Dharmasena and srilanka team cheating india

dambulla one day cricket against india,srilanka playing with 11 players + 2 umpires = 13 players



மீண்டும் சர்ச்சை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி இந்திய அணியை கல்லாட்டம் ஆடி தோற்கடித்து விட்டாதாம்..
அனைத்து இந்திய தொலைக்காட்சிகளும் களத்தில் குதித்து விட்டன..
எம் மக்கள் லட்சம் பேர் கொல்லப்பட்டபோது இல்லாத பரபரப்பு..
நாம் எத்தனை முறை சொல்வது இலங்கை சென்று விளையாடதீர்கள் அவர்கள் கொலைகாரர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று..
இந்த முறை அம்பயரை வாங்கி விட்டார்கள் அவ்வளவுதான்..
அதுவும் அம்பயரும் சிங்களர் சொல்லவாவேண்டும்..
இதற்கு போய் குய்யோ..முறையோ.. என்று கத்துகிறார்கள் சிலர்...
டேய் ஸ்ரீலங்கா என்று சொன்னாலே cheating தாண்டா..

maamallan,mahendravarman,rajaraja cholan to karikalan ref. ponniyin selvan,sivagamiyin sabatham

கோயில்கள் இருந்த இடங்களில் புத்த விகாரைகள்





மகேந்திரவர்மன்,மாமல்லன்,ராஜராஜசோழன் முதல் இன்றைய கரிகாலன்(அண்ணன் பிரபா) வரை தமிழர்களுக்கு எதிராக மந்திராலோசனை நடக்கும் இடமாக திகழும் புத்த விகாரைகள்..

பல தடங்கல்களை இவர்கள் ஏற்படுத்திய போதும் இறுதியில் தமிழனே வென்றுள்ளான்..

kilinochi paadasalai,kilinochi school



எம் மக்கள் வியர்வை சிந்தி கட்டிய பாடசாலை இன்று குண்டுகளால் சல்லடையாக்கப்பட்ட நிலையில்..

கலைஞர் கருணாநிதி, அம்மா ஜெயலலிதா கார்ட்டூன்

tamil nadu fishermen problem jp cartoon


2G spectrum ullal mathi cartoon,ராஜா ஊழல் மதி கார்ட்டூன்

காலம் சென்றால் எல்லாம் காற்றில் பறந்துவிடும் என்பது உண்மை தானோ...

LinkWithin

Related Posts with Thumbnails