yalpanam railway station


ஈழம் யாழ்ப்பானம் புகைவண்டி நிலையம்..

வெள்ளை வேன் போய்கொண்டு உள்ளது..

ஈழம் நல்லூர் முருகன் கோவில்


ஈழம் நல்லூர் முருகன் கோவில் திருவிழாவின் போது

தமிழர் நாம் ஒன்றாய் இணைவோம்..

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்......!

tamil thalaivar annan prabhakaran jathagam video

pondicherry minister,Amaichar


குளிர்சாதன அறைகளிலே உல்லாசமாக இருப்பதால் இது போன்று வெளியில் வரும் போது சற்று சிரமமாகத்தான் இருக்கும்..
பாண்டிச்சேரி அமைச்சர் ஒருவருக்கு பேன் தூக்கும் அல்லக்கை தொண்டர் ஒருவர்...

maaveerar naal 2010,மாவீரர் நாள் 2010



மாவீரர்களுக்கு வீரவணக்கம் செய்வோம்..
இவ்வேலையில் தமிழன் வெல்லவும்..தமிழீழம் மலரவும் சபதம் ஏற்போம்..

cuba muzhakkam,கவிஞர் காசி ஆனந்தன்


கியூபா முழக்கம்..!!


ஆள்கின்றாய் கொடுஞ் சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை நெஞ்சில் இருத்து!


பண்டைத் தமிழன் காலின் சுவடுகள்
பைந்தமிழ் மண்ணில் அழிந்திடவில்லை!
அன்றைத் தமிழன் ஆடியகுளத்தில்
அலைகள் இன்னும் கலைந்திடவில்லை!


ஆள்கின்றாய் கொடுஞ்சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை நெஞ்சில் இருத்து!


கோல வானைக் குருவி விழுங்குமோ?
கொடுவாய் முதலை விழுங்குமோ ஆற்றை?
ஈழ மண்ணை லங்கா விழுங்குமோ?
எங்கே பார்க்கலாம்...! என்னடா சேட்டை!


ஆள்கின்றாய் கொடுஞ்சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து


பாவி! நீ எம் மண்மிசை இந்நாள்
பாய்ச்சும் துப்பாக்கியின் கொடும் ரவைகள்
நீ அவை ரவைகள் என நினைத்தாலும்
நிச்சயம் அவைகள் சுதந்திர விதைகள்!


ஆள்கின்றாய் கொடுஞ் சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து!


தமிழ் ஈழம் யாம் பெறுவது மெய்யே!
தகர்ந்து சிதறும் எதிரிகள் கையே!
தமிழர் நெஞ்சில் எரிவது நெருப்பே!
தமிழ் வீரம் தமிழர்கை இருப்பே!


ஆள்கின்றாய் கொடுஞ்சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து!
மரபுக் கவிதைதம்பிகாள்!


வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் :கவிஞர் காசி ஆனந்தன்
பதிவு :புதிதாய் பிறப்போம்
நன்றி தமிழரசி

தமிழ் தேசிய தலைவர் 56 வது பிறந்த நாள்







26-11-2010 அன்று 56வது பிறந்த நாள் காணும் எங்கள் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் பெருமை அடைகிறோம்..

தமிழ் தேசியம் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன்


வல்லையில ்உதித்த சூரியப் புதல்வனே வருவாயா மீண்டும் ??..........அனாதையாய ்நிற்கிறோம் வருவாயா??... ..நீதந்த வீரம் நிலையாய் நிற்கிறதே எம்மில் ! தலைமைக்கு நீ வேண்டும் வருவாயா ??... ..துரோகங்கள் நிரந்தரம் -அல்ல உந்தந் தமிழ்ச் சேனை நாங்கள் நிரந்தரம் !!நிலையான தமிழீழம் நாம் காண நீ வேண்டும் தலைவன ேவந்து விடு..

தமிழினம் சிறப்பாக வாழ்ந்த பகுதிகள்,சிங்களர்களால் சிதைக்கப்பட்ட தமிழர் உடமைகள்



இன்று இந்நிலையில் இருந்தாலும் நிலை மாறும் தமிழன் வெல்வான் தமிழீழம் மலரும்..

எழில் நிறைந்த ஈழத்து புகைப்படங்கள்..







ஈழம் இயற்கை காட்சிகள்

deepavali valthukkal

தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..


தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..

thirudargal,lanjam,kalla market,thirudan



1959-ல் வரையப்பட்ட விகடன் கருத்துப்படம், அன்றிலிருந்து இன்றுவரை திருந்தியதாக தெரியவில்லை மேலும் நிலை இன்னும் மோசமாக சென்று கொண்டு இருப்பதாக தோன்றுகிறது..
தற்போது இதனுடன் மணல் கொள்ளையில் ஆரம்பித்து horlicks கொள்ளைவரை ஏன் சாக்கலேட் கொள்ளை வரை வந்து சேர்ந்து விட்டதாக தோன்றுகிறது..

prabhakaran 56th birthday





தமிழனின் பெருமையை வீரத்தினை உலகுக்கு உரக்க சொன்ன சுயநலமில்லா எங்கள் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் பெருமிதம் அடைகிறோம்..
26-11-2010 அன்று 56வது பிறந்த நாள்..

anuradhapura airport attack for tamil freedom

அனுராதபுரம் விமான நிலைய தாக்குதலில் வீரகாவியமாகிய எம் சகோதரர்களுக்கு வீரவணக்கம் செய்வோம்..


தேசியத் தலைவரின் அகவை 56


:!!: ♥ தேசியத் தலைவரின் அகவை 56 ♥ :!!:

:!!: வீழ்ந்து விடாத வீரம் :!: மண்டியிடாத மானம் :!!:
....... ..:!!: இருப்பாய் தமிழா நெருப்பாய் :!!:. ..........

:!!: தலைவன் பிறந்த நாள் அதுவே தமிழன் நிமிர்ந்த நாள் :!!:

murikandy,eelam holy place

தமிழை வேண்டுமென்ற அவமானப்படுத்தி தமிழ்மொழி அழிப்பில் மும்முரம் காட்டும் சிங்களவர்கள்..
எமக்கு கண்கள் கரிக்கிறது..உள்ளம் கசக்கிறது..

ஆனால் செம்மொழிகொண்டான் என கொடுத்த காசுக்குமேல் கூவசொல்பவர்களுக்கு..



இலங்கையின் புகழ் பெற்ற முறிகண்டிப் பகுதியினை தனிச் சிங்களக் கிராமமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன

தமிழினத்தின் எதிர்காலம் எப்படி அமையும் என்று யாரேனும் கேட்டால் கண்ணீரைத் தவிர வேறு எதனையும் பதிலாகத் தர முடியாது. அந்தள விற்று நிலைமை மோசமாகி வருகிறது. முறிகண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக புத்தபிரானுக்கு இருப்பிடம் அமைக்கப்படும் பணி நடைபெறுகின்றது.

maaveerar naal 2010

தமிழ்தேசிய மாவீரர்நாள் 27-11-2010..

மாவீரர்களுக்கு வீரவணக்கம் செய்வோம்..






endhiran Thinamani vimarsanam,sun pictures notice

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!

நன்றி தினமணி..

இந்த விமர்சனத்திற்க்காக தினமணிக்கு சன் பிச்சர்ஸ் நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக தமிழகத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது..

வாழ்க தமிழ்நாட்டு கருத்துரிமை,பத்திரிக்கை சுதந்திரம்..

tamil pengal amaippu,tamilar orunginaipu kuzhu,france


23 ème Commémoration de Thileepan
Jeune etudiant tamoul qui a sacrifié sa vie, pour avoir l'galité des tamoules au Sri Lanka, en effectuant une greve de la faim jusqu'à laisser sa vie pour aider siens.
Soyons nombreux à lui rendre hommage, jeune parlez en autour de vous, soyez la aussi.

indian law,sattam,wanted criminal in india,douglas devananda meets manmohan singh



மக்களுக்கு ஒரு சட்டம் அரசியல்வாதிகள் மற்றும் பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டம்..
இந்தியாவால் கொலை,திருட்டு,பிக்பாக்கெட் போன்ற குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கிரிமினல் டக்லஸ் தேவானந்தாவுடன் கைகொடுத்து சிரித்து மகிழும் இந்திய பிரதமர்..
இந்தியாவில் மக்களுக்கு மட்டும் தான் சட்ட்மோ என எண்ணத்தோன்றும் நிகழ்வு..

rajarajan kallarai,thani padai,muthu cartoon

thondhiran,endhiran advertisements,bala cartoon


டிவியை ஆன் பண்ண முடியாத அளவுக்கு
இவங்க பண்ற அட்டகாசம்இருக்கே..
அய்யய்யையோயோயோ.. தாங்க முடியல..
கார்ட்டூனிஷ்ட் பாலா

satta mandram therthal,2011,tamil nadu political dives,chinna gounder





விஜயகாந்த் கார்ட்டூன்கள்

காமன்வெல்த் விளையாட்டுக்கள்,மதி கார்ட்டூன்







காமன்வெல்த் விளையாட்டுக்கள் குறித்த கார்டுனிஷ்ட் மதி அவர்களின் கார்ட்டூன்கள்

earth,kadavul,payangaravatham,vipathu,kadamai,mathi cartoon







மதி கார்ட்டூன்கள்

oolal olipu thurai,mathi cartoon



ஊழல் ஒளிப்பு துறை மதி கார்ட்டூன்

hindi,telugu,endhiran,mathi cartoon



எந்திரன் திரைப்படம் பற்றிய மதி அவர்களின் கருத்துப்படம்..

paal kudam,pagutharivu,mottai,mathi cartoon



எந்திரன் திரைப்படம் பற்றிய மதி அவர்களின் கருத்துப்படம்..

எந்திரன் திரைப்படம்,robot,mathi cartoon



எந்திரன் திரைப்படம் பற்றிய மதி அவர்களின் கருத்துப்படம்..

endhiran muthalvar parattu,vari vilakku,adade,mathi cartoon



எந்திரன் திரைப்படம் பற்றிய மதி அவர்களின் கருத்துப்படம்..

enthiran release,rajini rasigargal,mathi cartoon


எந்திரன் திரைப்படம் பற்றிய மதி அவர்களின் கருத்துப்படம்..

STOP The Genocide of Tamils,orkut community,chinnappa nagar,nizam colony,Pudukkottai







கடந்த வருடம் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்க்கான பதாகை..

kumarappa,pulendhiran,abdullah,ragu,nalan,pazhani,karan,niresh,thavakumar,anbazhagan,ananthkumar,ninaivu alaigal


1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக கடற்புறாவில் பயணித்துக்கொண்டிருந்த


குமரப்பா , புலேந்திரன், அப்துல்லா, ரகு, நளன், பழனி, கரண், நிரேஷ், ரெஜினோல்ட், தவக்குமார், அன்பழகன், ஆனந்தகுமார் உள்ளிட்ட வேங்கைகள்

கைதுசெய்யப்பட்டு கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது .


1987ம் ஆண்டு ஒக்ரோபர் 5ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தாயக மண்மீதும் , தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை தமிழீழ மண்ணிற்காய் அர்ப்பணித்தனர்

common wealth and common man wealth,bala cartoon


என்ன மயித்துக்குடா உங்களுக்கு காமன்வெல்த் கேம்ஸ்..?!

commonwealth games haran cartoon



காமன்வெல்த் விளையாட்டுக்கள் ஹரன் கார்ட்டூன்

commonwealth games, madan cartoon



காமன்வெல்த் விளையாட்டுக்கள் மதன் கார்ட்டூன்

kuttimani,thangathurai,illegal arrest,great tamil people





தமிழ் போராளிகள் குட்டிமணி மற்றும் தங்கதுரை

பதுங்குகுளியிலிருந்த வாழ்வு இப்போ
பயங்களால் நிறைகிறது.கம்பிகளின் பின்னால் சாவுறையும் நினைவுகளோடுகாத்திருக்கும் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும்அம்மாக்கள் அழுதுவடிக்கும் கண்ணீரால்காலம் தனது கவிதைகளை எழுதிச் செல்கிறது.காணாமற்போன பிள்ளைகளையும் கணவர்களையும் கனவுகளில் கண்ணுற்றுத் திடுக்குற்று விழித்தகண்களிலிருந்து வரலாற்றின்கதைகள்தோற்றுக் கொண்டிருக்கிறது…..வெறுமை நிறைந்த மனங்களில் – எல்லாம்வெற்றிடமாய் கிடக்கிறது ஓர் சந்ததியின் வாழ்வு சாவுகளால் அடை(ட)க்கப்பட்டுள்ளது…

LinkWithin

Related Posts with Thumbnails