mother of all scandals spectrum

கோடிகளை சுருட்டிய கேடிகளுக்கு நாட்டு மக்கள் எப்படியிருந்தால் என்ன? தன் மக்கள் நலமாக இருந்தால் போதும் தானே..
















tamil mozhi padukolaigal



முதலில் மக்களை கொன்றவர்கள் தற்போது மொழியைக்கொல்ல முனைகின்றனர்

kalaignar tv runs in spectrum scandal money

REST IN PEACE - PARVATHI AMMA '' MOTHER OF THE NATION ''



:!!: ♥ எங்கள் தேசத்தின் அன்னைக்கு வீரவணகங்கள் ♥ :!!:

தேசத்தின் தாய்க்கு எமது வீர வணக்கம்!



தமிழினத்தின் தன்மானத்தைத்
தரணிக்குப் பறைசாற்றிய
தமிழ்மகனின் தாயே போற்றி!

Brigadier,Gadabi,aathavan

பிரிகேடியர் கடாபி/ ஆதவன்



சாதாரண போராளியாக இயக்கத்தில் தனது பணிகளைத் தொடங்கிய இத்தளபதி, தனக்கான தகைமைகளை வளர்த்துக்கொண்டு ஓர் உயரிய இராணுவத் தளபதியாக எப்படி உருவானார்? அல்லது எப்படி உருவாக்கப்பட்டார்? தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே அவரது போராட்டப் பணிகள் ஆரம்பகாலம் தொடக்கம் இருந்ததுவே அதற்கான காரணமாகவிருக்கக் கூடும்.

வாகனக் கண்ணாடியில் பார்த்தே வானில் பறக்கும் பறவைகளைக் குறிபார்த்துச்சுட்டுவிடும்திறமை அவருக்கு இருந்ததாக நான் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன். உண்மையோ பொய்யோ, ஆனால் நிச்சயம் அவர் அதற்கு முயற்சி செய்திருப்பார்.

'முன்னேறிப் பாய்தல்' என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராக புலிகள் நடத்திய 'புலிப்பாய்ச்சல்' நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக கடாபி அண்ணை நியமிக்கப்பட்டார்.

1995 ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002 தொடக்கம் வரை - அதாவது விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்குமிடையில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டது வரை - கடாபி என அழைக்கப்படும் ஆதவன் அண்ணை தான் இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார்.

உண்மையில் இம்ரான்-பாண்டியன் படையணியென்பது பல சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணா பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப் பயணத்தில் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தியிருந்தார்.

கரும்புலிகள் அணி, லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆழ ஊடுருவித் தாக்கும் அணி, லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி, விடுதலைப் புலிகளின் கவசப் படையணி போன்ற சிறப்புப் படையணிகளையும் படையப்பயிற்சிக் கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கி, வளர்த்து வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலைமைத்துவப் பண்பின் சிறப்புக்களைக் காணக்கூடியதாகவிருந்தது.

இப்பணிகளுக்கு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்துவந்த கடாபி அண்ணை இருபத்தி நான்கு மணிநேரமும் விடுதலைப் பணிக்காகவே ஓயாது இயங்கிக் கொண்டிருந்தார்.

ஒரு பயிற்சிப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு வேவுப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு தாக்குதல் பணியாகவிருந்தாலும் சரி, நேரம் எடுத்து திட்டமிடலுக்கே, கூடிய நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணையின் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.

பயிற்சித்திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக்காலத்தைக் குறுக்கவேண்டிவரும். அப்போதுகூட குறுகிய காலப் பயிற்சிதிட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாகவிருப்பார்.

அதேபோல தாக்குதல் நடவடிக்கை ஒன்றை பூர்த்தி செய்தாலும், அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள், எதிர்காலத்தில் என்ன விடயங்கள் மேம்படுத்தப்படலாம் என்பன போன்ற விபரங்களை உள்ளடக்கியதாக அவ்ஆவணங்கள் தயாரிக்கப்படும்.

இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ற திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான காலகட்டங்களின்போதும் மரபு வழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும் செயற்பாடுகளையும் பேணிவருவதில் கவனம் எடுத்துவந்தவர்தான் கடாபி அண்ணை.

பலாலி விமானத்தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியிருந்தது. அந்தத் தாக்குதலில் பங்குகொண்டவர்களின் அறிக்கைகள், ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைத்தொடர்பு உரையாடல்கள் என்பவற்றை கொண்டு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அந்த அறிக்கையின் ஒரு பகுதி இவ்வாறு இருந்தது. ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது”. அதனைத் திருத்தம் செய்த கடாபி அண்ணை சொன்னார். ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அது கவசவாகனத்தில் பட்டு அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது” என்று தெளிவாக எழுதப்படவேண்டும் என்று சொன்னார். இப்படியான துல்லியமான தரவுகள் இணைக்கப்படுவதே விசாரணைகள் முழுமைபெற உதவுமென்பது அவரின் இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது.

மேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு சிறிய விடயம்தான். ஆனால் அந்த சிறிய விடயத்திற்குள் புதைந்திருக்கும் ஆழமான இராணுவசார் முக்கியத்துவம் என்பது சாதாரண பொதுமகனுக்குப் புரியக்கூடியதன்று. ஆனால் அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளமுடியும். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவுசெய்வதில் கவனமாகவிருப்பார்.

பிரிகேடியர் கடாபி அவர்கள் சார்ல்ஸ் அன்ரனி படையணி பற்றி காணொளி


கடாபி அண்ணையைப் பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிக்கவேண்டிய பொறுப்பிலேதான் இருந்தார். ஒரு சாதாரண மரபுவழி இராணுவத்தில் உள்ள போர்வீரர்களுக்கு சண்டைக்கான மனநிலையைப் பேணுவதற்கான அறிவூட்டல்கள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் போராளிகளைப் பொறுத்தவரையில் அதற்கான அவசியம் இல்லை. அதேவேளையில் நிர்வாக ரீதியிலான அணிகளிலுள்ள போராளிகள் குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பின்னர் தாங்களும் சண்டைக்குச் செல்லவேண்டும் எனக் கேட்டு கடிதம் அனுப்புவார்கள் அல்லது நேரில் சந்தித்துக் கேட்பார்கள்.

நிர்வாக வேலைத்திட்டங்களிலுள்ள போராளிகளை, குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் கருதி, அவர்களை உடனடியான இன்னொருவரைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பது கடினமாகவிருக்கும். அவர்களுக்கு பல்வேறு உதாரணங்களை எடுத்துகாட்டி, சண்டையைப் போலவே மற்றைய பணிகளும் முக்கியமானதென பொறுமையாக அறிவுறுத்தி, தொடர்ந்தும் அவர்களை அப்பணியின் முக்கியத்துவம் கருதி வேலையில் மீண்டும் அமர்த்திவிடுவார். இவ்வாறு வெவ்வேறு பணிகளிலுள்ள போராளிகளை, ஒரே படையணியின் கீழ் நிர்வகித்து தனது திறமையின் மூலம் வழிநடத்திவந்தார் என்றே சொல்லவேண்டும்.

இவரது தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளிலேதான் இவர் நேரடியாக பங்குபற்றியிருப்பார் என்றே எண்ணுகின்றேன். குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் பலாலி விமானதளத்திற்கு அருகே இரண்டு அவ்ரோ விமானங்களை சுட்டுவீழ்த்தியிருந்தார். கடாபி அண்ணையின் குறிபார்த்துசுடும் திறமையை தலைவர் அவர்கள் ஏற்கனவே இனங்கண்டிருந்ததால், அதற்கான பணி, தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் அவ்விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய இராணுவ காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பு அணி வீரனாக இருந்த கடாபி அண்ணை, படிப்படியாக பல்வேறு கடமைகளை தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செய்துவந்தார். தமிழீழ தாயகத்திலிருந்த இராணுவதளங்கள் மீதான பெரும்பாலான கரும்புலி நடவடிக்கைகள் அனைத்தும் இவரது வழிநடத்தலின் கீழேயே நடாத்தப்பட்டது. அத்துடன் ஆழ ஊடுருவி சென்று நடத்தும் பல தாக்குதல் நடவடிக்கைகளும், இவரது வழிகாட்டலில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்வேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துவந்த பிரிகேடியர் கடாபி அவர்கள் ஈழப்போரின் நான்காம் கட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் மார்ச் மாதத்தின் இறுதிபகுதியில் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை எடுக்கவேண்டிய ஆயத்தப்பணிகளில் மற்றைய தளபதிகளுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

எதிர்பாராத விதத்தில் எதிரிகளின் இராணுவ வலு பல மறைமுக சக்திகளின் ஒத்துழைப்போடு அதிகரித்த நிலையில், பெருமளவிலான இறுதிக்கட்ட முறியடிப்புத் தாக்குதல் ஒன்றைச் செய்வதற்கு அணிகள் தயாராகவிருந்தன. ஆனால் இவ்வாறான படைநடவடிக்கைக்கான ஆயத்தப்படுத்தலை அறிந்துகொண்ட எதிரிகள், விடுதலைப்புலிகள் தங்கியிருந்த ஆனந்தபுரம் பகுதி மீது, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


இறுதிவரை உறுதியோடு போரிட்ட கடாபி அண்ணை ஆனந்தபுரக் களத்தில் படுகாயமடைந்தார். அவரைக் காப்பாற்றி வெளியே கொண்டுவருவதற்காக முயற்சிகள் நடந்தபோதும், களத்தின் இறுக்கமான நிலையை உணர்ந்து, அக்களத்திலேயே சயனைற் உட்கொண்டு, தன்னோடு இணைந்து நின்ற பிரிகேடியர் தீபன் அண்ணை பிரிகேடியர் விதுசா அக்கா பிரிகேடியர் துர்க்கா அக்கா, பிரிகேடியர் மணிவண்ணன் ஆகியோருடன், இன்னும் பல வீரர்களுடன் ஆனந்தபுரம் மண்ணில் வித்தாகிபோனார்.

தமிழர்களின் ஒளிவிளக்கு எமது தலைவரின் அன்னை


தமிழர்களின் ஒளிவிளக்கு எமது தலைவரின் அன்னை இயற்கை எய்தி உள்ளார். சுமார் 20 மாதங்களாக அலைக்கழிக்கப்பட ஒரு பரிசுத்தமானவரின் உயிர் துடிப்பு நின்று விட்டது. தனது மகனின் தலைமையில் ஈழ அரசாங்கம் அமைந்து விட்டது என்று எண்ணி தமிழகத்தில் இருந்து 2002 இல் ஈழம் வந்தனர். தனது மகனின் தலைமையில் உலகுக்கே முன்மாதிரியான அரசாங்கம் ஈழத்தில் நடைபெறுவதை கண்டு பூரிப்படைந்தனர். குறிப்பாக திரு.வேலுப்பிள்ளை தனது மகனின் பணிகளை கண்டு பூரித்தே போனார். யுத்தம் வந்தது, இயக்கம் சொன்னது இந்தியாவுக்கு புலம் பெயருங்கள் என்று, மறுத்தனர் நாங்கள் கடைசி வரை தம்பி கூடவே இருக்க விரும்புவதாக கூறினர். கிளிநொச்சி வீழ்ந்தது, புலிப்படை தம்பிகள் இருவரையும் தோள்களில் தூக்கிகொண்டு ஒவ்வொரு இடமாக சென்றனர். இறுதியில் தேசிய தலைவரின் எண்ணப்படியே சரண் அடைய வைக்கப்பட்டனர். சிங்கள காடையர்களின் அரசு அவர்களை கொடிய வெலிக்கடை சிறையில் அடைத்தது, சித்திரவதை செய்தது. அசரவில்லையே, ஒரு வார்த்தை சொல்லவில்லையே. திரு. வேலுப்பிள்ளை மாவீரர் ஆனது தெரியாமலேயே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் பார்வதி அம்மா, துரோகிகளால் அலைக்கழிக்கப்பட்டார். இன்று காலை நம்மை விட்டு பிரிந்தார். தமிழர்களே அழாதீர்கள், உணர்ச்சி பெறுங்கள். பார்வதி அம்மாவின் நெஞ்சுறுதியை பெறுவோம்.

எங்கள் போராட்டம் ஓயாது
எங்கள் லட்சியம் தோற்காது
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரனே எங்கள் தலைவர்
.

mother of the nation parvathi amma



கணவன் இறந்திட்டால் என்ன
என் மகன் இருக்கிறான்.
அழைத்துச்செல்லுங்கள் அவனை
போர்முனை நோக்கி..
என்றபோது
...புன்முகம் மாறாது
புறப்பட்ட மகனையும்
இன்முகம் மாறாது
அனுப்பிய தாயையும்
புறநானூற்றில் கண்டேன்.
—–000—–
நின் புதல்வனை
தமிழ் காக்க அனுப்பி
தமிழன் மானம் காக்க
வளர்த்து
ஈழம் முழுக்க
வீரம் விளைய
தேசியத் தலைவனாய்
புறமுதுகு காட்டாத
புறநானூற்று வீரத்தை
பார் போற்ற-உம்மால்
இந்நூற்றாண்டில்
கண்டேன்!
தமிழுக்கு தலைவனை தந்தவளே…எம் தாயே …இன்று உம் உயிர் பிரிந்திருக்கலாம்..
இத்தரணி உள்ளவரை,தமிழது உள்ளவரை,உம் நினைவுகள் மறையாது..நிறைந்திருக்கும்
எங்கள் நெஞ்சங்களில்!!

kanneer anjali

thaayaar parvathi ammal iruthi anjali,periyal dravidar kazhagam

பெரியார் திராவிடர் கழகம் - சென்னை சார்பாக தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் இறுதி அஞ்சலி - அமைதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு சென்னை எம். சீ. ஆர் நகர் சந்தைப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தமிழ்த் தாய்க்கு அஞ்சலி செலுத்த கூடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தொடர்புக்கு - 9941364679

parvathi amma maraivu irangal koottam

பார்வதி அம்மையார் மறைவு - இரங்கல் கூட்டம்
=================================================
நாள் : 21 பிப்ரவரி 2011, திங்கள் கிழமை
நேரம் : மாலை 4 மணி
இடம் : தியாகராய நகர் மேல்நிலைப் பள்ளி வளாகம்
வெங்கட் நாராயணா சாலை
சென்னை
பங்கேற்போர் :
பழ. நெடுமாறன்
வைகோ
தா. பாண்டியன்
மரு. செ. நெ. தெய்வநாயகம்
தமிழ் முழக்கம் சாகுல் அமீது
ஆவடி மனோகரன்
மற்றும் பலர்

veeravanakkam paarvathi ammal

வீர மகனை பெற்ற, வீர தாய்க்கு வீர வணக்கங்கள் !







விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மருத்துவமனையில் , நினைவு திரும்பாமலேயே இறந்து விட்டதாக செய்திகள் வந்துள்ளது.

ஏன் கருணாநிதி ஐயா எங்களை திருப்பி அனுப்பி விட்டார் ? - பார்வதி அம்மாள் நினைவு இருக்கையில் பேசிய வார்த்தைகள் இது.

“I do not know why Kalaignar Aiya [Tamil Nadu Chief Minister M. Karunanidhi] sent me back,” Parvathi Amma, who was admitted to Valveddiththu’rai (VVT) hospital told TamilNet Net News in May 2010.


தமிழர்களை கொன்ற சோனியா காந்தியை , விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற கருணாநிதி அரசுதான் , படுக்கையோடு படுக்கையாக மருத்துவம் வேண்டி சென்னை வந்த பார்வதி அம்மையாரை , விமான நிலையத்தை விட்டு வெளியே வர சம்மதிக்காமல் விரட்டி அடித்தது என்பதை ரோசஹம் உள்ள தமிழன் நினைவில் கொள்ள வேண்டும்.

pudukkottai muthukumar veeravanakkam







தோழர் புதுக்கோட்டை முத்துக்குமார் கொல்லப்பட்டார். காரைக்குடியில் சிதம்பரம் தோற்க்கடிக்கப்பட்ட பரப்புரைக்கு துணை நின்றவர், இடம், பொருள், உணவு,உதவிகள் அனைத்தும் செய்த அற்புதமான தோழர். நல்ல நண்பர். ஒரு வருடத்திற்கு முன்பு தான் அவர் திருமணம் நடந்தது. நீண்டகால போராட்டத்திற்கு பிறகு இல்லவால்க்கைக்கு வந்தவர். சிறந்த சமரசமில்லா தமிழ்தேசியவாதி.

’நாம் தமிழர் கட்சி’ முத்துக்குமார் வெட்டிக்கொலை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக இருந்தவர் சுப.முத்துக்குமார். இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் காட்டில் இருந்தவர். இவருக்கு தமிழ் உணர்வாளர்களுடன் அதிக உறவு உண்டு.
இவர் கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கரு.காளிமுத்து என்பவரின்
மகளை திருமணம் செய்தார்.
சமீபகாலமாக ஈழப்பிரச்சனையில் மிகவும் தீவிரமாக செயல்பட்டுவந்தார். சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டுவந்தார்.
சீமான் கலந்துகொள்ளும் எந்த விழாவாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குவதில் முக்கிய பங்குவகித்தவர்.

கடந்த மாதத்தில் சீமான் உயிருக்கு சிலர் குறி வைத்திருப்பது தெரிந்ததும், சீமானுக்கு பலத்த பாதுகாப்பு பணியை செய்து வந்ததும் முத்துக்குமார்தான்.இந்த நிலையில் இன்று இரவு 10 மணிக்கு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இவர் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

LinkWithin

Related Posts with Thumbnails