wanted criminals in india duclos devananda,thedapadum kutravaali since 1990's





நீயா தமிழனின் பிள்ளை?


சூடு சொரணை கொஞ்சமும் இல்லை

சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன்

வீட்டுக்கே

தோரணம் ஆனது வாழை! - நீயும்

நாட்டினில் உன்னை அழித்தவன்

காலையே

நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த

பகைவனை

கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! -

அவன்

சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ

நீ

சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய்

உன்

தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட

ஆயிரம் பெருமை படைத்த உன்

அன்னை மண்

அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில்

தமிழ்வானில்

இன்னொருவன் கொடி பறக்கும்! - அட

நன்றடா நன்று! இருந்துபார் உன்

மண்ணில்

நாளை அவன் பிள்ளை பிறக்கும்..!!


வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் : கவிஞர் காசி ஆனந்தன்
பதிவு :கரும்புலிகள் உயிராயுதம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails