தமிழீழ மருத்துவமனை

தமிழீழத்தில் புலிகளால் நடத்தப்பட்ட மருத்துவமனைகளில் இரண்டு புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும்.அதில் ஆண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களும் பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களும் இடம்பெற்றிருக்கும்.அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் பெயர்கள் சூட்டப்பட்ட குழந்தைகளுக்கு புலிகளின் நிதி செயலகத்தின் மூலம் இலங்கை பணம் ரூபாய் 5000 வைப்பு நிதியாக செலுத்தப்பட்டு அதற்கான பத்திரம் வழங்கப்படும்.அந்த குழந்தைகளின் 18 ஆவது வயதில் கிடைக்குமாறு அந்த தொகை முதலீடு செய்யப்பட்டிருக்கும்.

தமிழகத்தில் தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு தமிழக அரசு நிதிசலுகை செய்கிறது.ஆனால் இந்த சலுகையை பெறும் படங்களில் பெயரை தவிர வேறு எதிலும் தமிழ் இருப்பது இல்லை.இப்படி தேவை இல்லாமல் மக்களின் வரிபணத்தை வீணாக்காமல்.தமிழீழத்தை பின்பற்றி தமிழக அரசு தமிழில் பெயர் சூட்டும் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கலாமே.

2 comments:

  1. oh angu appadi seivaargalaa..!!
    ingu...vendaam...

    ReplyDelete
  2. idhu sariyana tamil aatchiku ugandhadhu varaverka thakadhu

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails